வழிபாடு

சென்னை புத்தகரம் நாகாத்தம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

Published On 2022-07-21 08:49 GMT   |   Update On 2022-07-21 08:49 GMT
  • 23-ந்தேதி அம்மன் வீதி உலா, திருவிளக்கு பூஜை நடக்கிறது.
  • 24-ந்தேதி தீச்சட்டி ஏந்துதல் மற்றும் தீ மிதி திருவிழா நடக்கிறது.

சென்னை புத்தகரம் லட்சுமி நகரில் உள்ள ஸ்ரீ நாகாத்தம்மன் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி சமேத சர்பேஸ்வரர் ஆலயத்தில் 31-ம் ஆண்டு தீ சட்டி ஏந்துதல், தீ மிதி திருவிழா மற்றும் கும்பாபிஷேக விழா தொடங்கியது. காலை 9 மணிக்கு அரசானி கால் அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.

இன்று (21-ந்தேதி) யாக சாலை பூஜை, கணபதி ஹோமம் நடக்கிறது. 22-ந்தேதி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 7.30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. 23-ந்தேதி அம்மன் வீதி உலா, திருவிளக்கு பூஜை நடக்கிறது.

24-ந்தேதி அம்மனுக்கு கூழ் வார்த்தல், தீச்சட்டி ஏந்துதல் மற்றும் தீ மிதி திருவிழா நடக்கிறது. 25-ந்தேதி அம்மன் திரு வீதி உலா நடக்கிறது.

Tags:    

Similar News