வழிபாடு

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா

Published On 2022-06-07 06:14 GMT   |   Update On 2022-06-07 06:14 GMT
  • சிறப்பு பூஜை நடைபெற்று அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
  • பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

மதுரை மாவட்டம்,சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் அமாவாசைக்குப் பின்னர் வரும் திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி 17 நாட்கள் நடைபெறும். தினசரி திருவிழா விமர்சையாக நடைபெறும்.

இதேபோல் இந்த ஆண்டு திருவிழா கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. கொடியேற்ற பொருட்கள் மேளதாளத்துடன் நான்கு ரதவீதிகளில் வலம் வந்து கோவில் வளாகத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் கொடியேற்றும் விழா நடந்தது. சிறப்பு பூஜை நடைபெற்று அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

இதில் பேரூராட்சிமன்ற தலைவர்கள் சோழவந்தான் ஜெயராமன், வாடிப்பட்டி பால்பாண்டி, வார்டு கவுன்சிலர்கள் சத்யபிரகாஷ் குருசாமி, செந்தில்வேல், திருவிழா கொடியேற்ற உபயதார் சிங்கம் என்ற மந்தையன் சேர்வை குடும்பத்தார் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோவில் செயல்அலுவலர் இளமதி, தக்கார் கமலா உட்பட கோவில் பணியாளர்கள் திருவிழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News