வழிபாடு
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
சிவாச்சாரியார்கள் பிரதான சங்குகளை சுமந்து கோவிலின் உள் பிரகாரம் மற்றும் வெளிப்பிரகாரங்களில் வலம் வந்து தர்பாராண்யேஸ்வரர், தியாகராஜருக்கு மகா அபிஷேகம் செய்தனர்.
காரைக்காலை அடுத்த திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாதம் 4-வது சோமவாரத்தையொட்டி நேற்று 1008 சங்காபிஷேகம் நடந்தது. இதையொட்டி 1008 சங்குகளில் புனிதநீர் நிரப்பி, விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து சதுர்வேத, ஆகம ஆசிர்வாதம், தேவாரம் பாடப்பட்டு மகா தீபாராதனை நடந்தது.
பின்னர் சிவாச்சாரியார்கள் பிரதான சங்குகளை சுமந்து கோவிலின் உள் பிரகாரம் மற்றும் வெளிப்பிரகாரங்களில் வலம் வந்து தர்பாராண்யேஸ்வரர், தியாகராஜருக்கு மகா அபிஷேகம் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் தலைமையில் ஊழியர்கள் செய்திருந்தனர்.
பின்னர் சிவாச்சாரியார்கள் பிரதான சங்குகளை சுமந்து கோவிலின் உள் பிரகாரம் மற்றும் வெளிப்பிரகாரங்களில் வலம் வந்து தர்பாராண்யேஸ்வரர், தியாகராஜருக்கு மகா அபிஷேகம் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் தலைமையில் ஊழியர்கள் செய்திருந்தனர்.