ஆன்மிகம்
துறையூர் பத்துமலை முருகன் கோவில் கும்பாபிஷேகம்
துறையூரில் மலேசியாவில் உள்ளது போல் 33 அடி உயர பத்துமலை முருகன் சிலை கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
துறையூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே கரட்டுமலை ஸ்ரீ பால தண்டாயுதபாணி கோவில் உள்ளது. இங்கு மலேசியாவில் உள்ளதுபோல் 33 அடி உயர பத்துமலை முருகன் சிலை கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
இந்நிலையில் முருகனுக்கு புதியதாக 7 அடி நீளத்தில் மயில் சிலை அமைக்கப்பட்டும், முருகன் சிலைக்கு வர்ணம் பூசப்பட்டது. இதையொட்டி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆறுபடையப்பன் சிலை அமைப்புக் குழுவினர் செய்திருந்தனர்.
இந்நிலையில் முருகனுக்கு புதியதாக 7 அடி நீளத்தில் மயில் சிலை அமைக்கப்பட்டும், முருகன் சிலைக்கு வர்ணம் பூசப்பட்டது. இதையொட்டி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆறுபடையப்பன் சிலை அமைப்புக் குழுவினர் செய்திருந்தனர்.