ஆன்மிகம்
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் வெளியில் நின்று பக்தர்கள் தரிசனம்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் வெளியில் நின்று பக்தர்கள் தரிசனம்

Published On 2021-08-02 06:09 GMT   |   Update On 2021-08-02 06:09 GMT
கோவில்களில் தினசரி பூஜை நடத்தப்பட்டாலும், பக்தர்கள் கூடுவதற்கு 3 நாட்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஆடிப்பெருக்கு மற்றும் கிருத்திகையையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் பொங்கல் வைத்தல், நேர்த்திக்கடன் செலுத்துதல் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுக்கு மாவட்டம் நிர்வாகம் தடை விதித்துள்ளது. கோவில்களில் தினசரி பூஜை நடத்தப்பட்டாலும், பக்தர்கள் கூடுவதற்கு 3 நாட்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி நேற்று நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் தினசரி வழக்கமாக நடைபெறும் பூஜை நடத்தப்பட்டது. பின்னர் கோவில் நடை மூடப்பட்டு விட்டது. எனவே பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நின்று சாமி தரிசனம் செய்தனர். அங்கு அதிக கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறு கோவில் பணியாளர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வந்தனர். நாளை மறுநாள் (புதன்கிழமை) முதல் கோவிலுக்குள் சென்று பக்தர்கள் வழிபட அனுமதி அளிக்கப்படும் என பணியாளர்கள் தெரிவித்தனர். இதேபோல் நேற்று அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் வெளியில் நின்று சாமி தரிசனம் செய்ததை காணமுடிந்தது.
Tags:    

Similar News