ஆன்மிகம்
வைகாசி விசாகத்தையொட்டி வேலவன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வினைதீர்க்கும் வேலவன் கோவிலில் 57-வது ஆண்டு வைகாசி விசாகத்தை முன்னிட்டு முருகப்பெருமான் மற்றும் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வினைதீர்க்கும் வேலவன் கோவிலில் 57-வது ஆண்டு வைகாசி விசாகத்தை முன்னிட்டு நேற்று காலை முருகப்பெருமான் மற்றும் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை, பூஜைகள் நடைபெற்றன. கொரோனா முழு ஊரடங்கு காரணமாக இந்த சிறப்பு பூஜையில் நேற்று பக்தர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.