ஆன்மிகம்
வேடசந்தூர் அருகே மவுனகுரு வேலுசாமி சித்தர் குருபூஜை

வேடசந்தூர் அருகே மவுனகுரு வேலுசாமி சித்தர் குருபூஜை

Published On 2021-02-19 07:09 GMT   |   Update On 2021-02-19 07:09 GMT
மவுனகுரு வேலுசாமி சித்தர் ஜீவ சமாதியில் 6-ம் ஆண்டு குருபூஜையை முன்னிட்டு 108 சாதுக்கள் முன்னிலையில் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு சிறப்பு யாக பூஜை நடந்தது.
வேடசந்தூர் அருகே உள்ள ஸ்ரீராமபுரம் மண்டபத்தில் மவுனகுரு வேலுசாமி சித்தர் ஜீவ சமாதியில் 6-ம் ஆண்டு குருபூஜை நடந்தது. அதையொட்டி நேற்று அதிகாலையில் கணபதி பூஜையுடன் விழா தொடங்கி 108 சாதுக்கள் முன்னிலையில் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு சிறப்பு யாக பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தக்குடம் ஊர்வலமாக கோவிலை சுற்றி கொண்டு வரப்பட்டு மவுனகுரு வேலுசாமி சிலையில் ஊற்றப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

இதில் திண்டுக்கல், திருச்சி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
Tags:    

Similar News