search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குரு பூஜை"

    • பல்வேறு அரசியல் கட்சி சார்பிலும் தேவர் சிலை மற்றும் மருது பாண்டியர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • பா.ஜ.க. சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    மதுரை:

    பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா இன்று கொண்டாடப்பட்டது. இதற்காக மதுரை கோரிப்பாளையம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் நினைவிடங்களில் உள்ள தேவர் சிலையில் முக்கிய அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    தேவர் ஜெயந்தி விழா மற்றும் மருதுபாண்டியர் குருபூஜை விழாக்களில் பங்கேற்க அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை விமானத்தில் சென்னையிலிருந்து மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவரை முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்றனர்.

    தொண்டர்களின் வரவேற்பு பெற்ற எடப்பாடி பழனிசாமி தெப்பக்குளத்தில் உள்ள மருது சகோதரர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், நத்தம் விஸ்வநாதன், காமராஜ், ராஜேந்திர பாலாஜி, விஜயபாஸ்கர், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இதையடுத்து காரில் புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி கமுதி அருகே பசும்பொன் கிராமத்திற்கு சென்று பசும்பொன் முத்து ராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அ.தி.மு.க. தொண்டர்கள் திரண்டு நின்று எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.

    ம.தி.மு.க. சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, மதுரையில் உள்ள மருது சகோதரர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பூமிநாதன் எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் முனியசாமி, கீரைத்துறை பாண்டியன், அன்ன முகமது உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் கோரிப்பாளையம் தேவர் சிலை மற்றும் தெப்பக்குளம் மருதுபாண்டியர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


    தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக மதுரை வந்த சசிகலா இன்று காலை கோரிப்பாளையம் தேவர் சிலை மற்றும் தெப்பக்குளம் மருதுபாண்டியர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவரது ஆதரவாளர்கள் அவரை வாழ்த்தி கோஷம் எழுப்பினார்கள்.


    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கோரிப்பாளையம் தேவர் சிலை, தெப்பக்குளம் மருது பாண்டியர் சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பல்வேறு அரசியல் கட்சி சார்பிலும் தேவர் சிலை மற்றும் மருது பாண்டியர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


    பா.ஜ.க. சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மாவீரன் அழகு முத்துக்கோனின் 266-வது குருபூஜையை முன்னிட்டு 11-ந்தேதி எழும்பூரில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
    • முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஆங்கிலேய அரசாங்கத்திற்கு வரி தர மறுத்து போர்க்களத்தில் உயிர் நீத்தவரும், இந்திய நாட்டின் சுதந்திரத்திற்கு வித்திட்டவரும், வாள்வீச்சு, காளை அடக்குதல், மல்யுத்தம் போன்றவற்றில் கைதேர்ந்தவருமான சுதந்திர போராட்ட தியாகி மாவீரன் அழகு முத்துக்கோனின் 266-வது குருபூஜையை முன்னிட்டு 11-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10.45 மணியளவில் சென்னை எழும்பூரில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அனைவரும் திரளாக கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • குருபூஜை விழா இன்று தொடங்கி நாளை வரை நடைபெற உள்ளது.
    • பாம்பன் சுவாமிகள் இயற்றிய சண்முக கவசம் புகழ்பெற்றது.

    பாம்பன் சுவாமிகளின் 94-வது குருபூஜை விழா இன்று தொடங்கி நாளை வரை நடைபெற உள்ளது. இதையடுத்து திருவான்மி யூரில் உள்ள பாம்பன் சுவாமிகள் ஜீவசமாதியில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

    இன்று அதிகாலை 5.30 மணி முதல் 6.30 மணிவரை ஹோமம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதை தொடர்ந்து பாம்பன் சுவாமிக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், 108 சங்காபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    காலை 10.30 மணிக்கு பாம்பன் சுவாமிகளின் பாடல்கள் பாராயனம், மதியம் அன்னதானம் நடைபெற்றது. மாலை 5 மணி முதல் 6 மணிவரை விசேஷ பூஜை மற்றும் மேளக் கச்சேரி நடைபெற்றது.

    இதை தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, இரவு 8 மணிக்கு பாம்பன் சுவாமிகள் மற்றும் 6666 பாடல்கள் அடங்கிய புத்தகம் மேளம், நாதஸ்வர இசையுடன் கோவில் வளாகத்தில் உட்புறப்பாடு நடைபெற்றது. பின்னர் இரவு 11 மணி முதல் அதிகாலை வரை 6 கால பூஜை சண்முக சகச்சிரநாம அர்ச்சனையுடன் ஓதுதல் நடக்கிறது.

    நாளை (9-ந் தேதி) காலை சிறப்பு சோடச உபசார மற்றும் குமாரஸ்தல பூஜையும், மகேஸ்வர பூஜையும் நடைபெற உள்ளது.

    பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் ராமேசுவரத்தை அடுத்த பாம்பனில் பிறந்தார். இவரது இயற்பெயர் அப்பாவு ஆகும்.

    முருகனின் வழிபாடாக இவர் மொத்தம் 6666 பாடல்கள் இயற்றினார். இவை ஆறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

    பாம்பன் சுவாமிகள் இயற்றிய சண்முக கவசம் புகழ்பெற்றது. சிறுவயதில் இவருக்கு கந்தர் சஷ்டிக் கவசம் மிகவும் ஈர்த்த நூலாகும். இதுவே இவர் பின்னாளில் சண்முக கவசம் இயற்ற தூண்டுதலாக இருந்தது. அருணகிரிநாதரை ஞானகுருவாகக் கொண்ட இவர் பின்னாளில் உபய அருணகிரிநாதர் என்ற பெயரும் பெற்றார். பாம்பன் சுவாமிகள் 1929-ம் ஆண்டு மே 30-ந்தேதி முக்தி அடைந்தார்.

    மாதந்தோறும் வரும் பவுர்ணமி நாட்களில் திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமிகள் ஜீவ சமாதியில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அவரது அருளை பெற்று வருகிறார்கள்.

    • எறிபத்த நாயனார் கையில் எப்பொழுதும் ஒரு கோடாலியோடு இருப்பார்.
    • அழுத்தமான சிவபக்தி என்பது தான் இதன் மையப்புள்ளி.

    63 நாயன்மார்களில் வன்தொண்டர்கள் உண்டு. அப்படிப்பட்ட தொண்டகளில் ஒருவர்தான் எறிபத்த நாயனார். கையில் எப்பொழுதும் அவர் ஒரு கோடாலியோடு இருப்பார்.

    ஒரு முறை அரசனின் பட்டத்து யானை, சிவகாமியாண்டார் என்ற வயதான சிவனடியார் எடுத்து வந்த பூஜை பொருட்களை தட்டி விட, அவர் அழுது கொண்டே நின்றார். அரசன் யானை என்பதால், யானையையோ யானைப் பாகனையோ தண்டிக்கவும் முடியவில்லை. தன் நிலையை நினைத்து வருந்தினார்.

    இதனைக் கேள்விப்பட்ட அடுத்த நிமிடம், கோபத்தோடு விரைந்து வந்த எறிபத்தர், அரசனுடைய பட்டத்து யானை என்றும் பார்க்காது யானையையும், யானைப்பாகனையும் தன் கையில் இருந்த மழுவால் (கோடரியால்) தண்டித்தார்.

    இந்தச் செய்தியை ஓடிச் சென்று பலரும் அரசிடம் தெரிவித்தனர். சிவனடியார் ஒருவர் இக்கொடுஞ்செயலைச் செய்தார் என்று சொல்ல, அப்படி சிவனடியார் ஆத்திரத் தோடு செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று விசாரித்தார். முழுக்கதையையும் அறிந்த புகழ்ச் சோழன், எறிபத்த நாயனார் செயல் சரிதான் என்றும், இதற்குத் தானும் பொறுப்பு என்றும் தன்னையே வாளால் தண்டித்துக் கொள்ள முனைய, எறிபத்த நாயனார், அந்த வாளை வாங்கி தன்னை மாய்த்துக் கொள்ள முயன்றார்.

    இவை அத்தனையும் உணர்ச்சி வசத்தால் செய்யப்பட்ட செயல்கள் என்றாலும், இதனுடைய உயிர் துடிப்பாக இருப்பது சிவநிந்தையைப் பொறுக்க முடியாமையும், சிவனுடைய பூஜை அவமதிப்பை தாங்க முடியாமையும், சிவ நெறியிலும் சிவபூஜையி லும் உள்ள மிக அழுத்தமான நம்பிக்கையும் ஆகும். அழுத்தமான சிவபக்தி என்பது தான் இதன் மையப்புள்ளி.

    இச்செயல்களை திருவிளையாடலாக நடத்திய சிவபெருமான், இடப வாகனத்தில் உமையம்மையாரோடு தோன்றி, இவர்களை எல்லாம் மறுபடியும் உயிர்ப்பித்து அருளினார்.

    • அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி தபோவனத்தில் ஸ்ரீ ஞான அகஸ்தியர் குருபூஜை விழா நடைபெற்றது.
    • இதனையொட்டி யாகசாலை பூஜைகள் மற்றும் சங்கு அபிஷேக பூஜை நடைபெற்றன.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் சுப்ரமணிய நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி தபோவனத்தில் ஸ்ரீ ஞான அகஸ்தியர் குருபூஜை விழா நடைபெற்றது. இதனையொட்டி யாகசாலை பூஜைகள் மற்றும் சங்கு அபிஷேக பூஜை நடைபெற்றன.

    இந்த பூஜையில் 1008 வலம்புரி மற்றும் இடம்புரி சங்குகள் வைக்கப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது. இதனையொட்டி ஞான அகஸ்தியருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் 1008 சங்கு வைத்து பூஜை செய்து, பக்தர்கள் தங்கள் கைகளால் சங்காபிஷேகம் செய்தனர். தொடர்ந்து பூஜையில் வைக்கப்பட்ட இடம்புரி சங்குகள் 900 பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

    அதேபோல் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கோட்டையூர் பகவதி சாமிகள், பண்ணவாடி சாமிகள், சன்னியாசிகள், அகோரிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஸ்ரீ நவகோடி சித்தர்கள் அறக்கட்டளை நிறுவனர் சித்தரசு சுவாமிகள் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.

    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திருமூலரை தரிசித்தனர்
    • கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    கும்பகோணம் அருகே உள்ள சாத்தனூரில் திருமூல நாயனார் கோவில் உள்ளது. 63 நாயன்மார்களில் ஒருவரான திருமூலர் அவதரித்த சாத்தனூரில் திருமூலரை மூலவராக கொண்ட கோவில் அமைந்துள்ளது சிறப்பு வாய்ந்ததாகும்.

    இந்த கோவிலில் நேற்று அசுபதி நட்சத்திரத்தையொட்டி திருமூலருக்கு மஞ்சள், திரவிய பொடி, பால், தயிர் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திருமூலரை தரிசித்தனர். இதில், கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சந்திரசேகரன் மற்றும் பலர் செய்திருந்தனர்.

    • அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவர் அதிபத்தநாயனார்.
    • அதிபத்தர் என்று தூய தமிழால் அழைக்கப்பட்டார்.

    இன்று (வெள்ளிக்கிழமை) அதிபத்த நாயனார் குருபூஜை. அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவரான அதிபத்தநாயனார் நாகையில் வாழ்ந்தவர். பக்தியிலும் அதிதீவிர பக்தி உடையவர். ஆதலால் அதி பக்தராய் விளங்கிய நாயனார், அதிபத்தர் என்று தூய தமிழால் அழைக்கப்பட்டார். இவர் மீனவ குலத்திற்கு விளக்காக அவதரித்தவர்.

    சிவபெருமானிடம் இருந்த அதீதமான பக்தியினால், தமது வலையில் விழும் மீன்களுள் ஒன்றை மீண்டும் கடலிலேயே சிவார்ப்பணமாக விடும் வழக்கத்தை ஒவ்வொருநாளும் மேற்கொண்டிருந்தார். ஒருநாள் அவ்வலையில் ஒரே ஒரு மீன் மட்டும் அகப்பட்டது. அதுவும் தங்கமாக ஜொலிக்கும் விலை மதிப்பற்ற ஒன்று. அப்படி இருந்தும் அதனை ஒரு பொருட்டாகத் தனக்கென்று எடுத்துக்கொள்ளாமல் மீண்டும் கடலிலேயே விட்டுவிட்டார்.

    நாயனாரது பக்தியை மெச்சிய பெருமான் ரிஷப வாகனத்தில் அம்பிகையுடன் தோன்றி அவருக்கு அருளினார் என்பது பெரியபுராணம் காட்டும் வரலாறு.

    நாயனார் அருள் பெற்ற ஆவணி மாத ஆயில்ய நட்சத்திரத்தன்று நாகை காயாரோகணேஸ்வர சுவாமி ஆலயத்தில் ஐதீக விழாவாகக் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் இதனைக் காண அடியார்கள் வருகிறார்கள். பகலில் நடைபெறும் உற்சவம் இது.

    • பரதேசி ஆறுமுகம் சுவாமிகள் குருபூஜை விழா நடந்தது.
    • பக்தர்கள் நேர்த்திக்கடனாக பால் காவடி, சந்தன காவடி, புஷ்ப காவடி எடுத்தனர்.

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகா கோட்டுப்பாக்கம் கிராமத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பரதேசி ஆறுமுகம் சுவாமிகள் குருபூஜை விழா நேற்று நடந்தது.

    காலையில் பரதேசி ஆறுமுக சுவாமிகள் ஜீவசமாதியில் குருபூஜையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து கோவில் முன்பு உலக நன்மைக்காகவும் பருவ மழை பெய்ய வேண்டியும் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.

    பின்னர் பரதேசி ஆறுமுக சுவாமி ஜீவசமாதிக்கு முன்பு பொங்கல் செய்து வைத்து படைக்கப்பட்டது.

    திருமணி சேறைவுடையார் சிவன் கோவில் சிவயோகி சித்தர் ஐ.ஆர்.பெருமாள் சுவாமி தலைமையில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சிவனடியார்கள் குழந்தை வரம் கேட்டு வந்த பெண்களுக்கு பிரசாதம் வழங்கினர்.

    இதனை மடியில் பெற்றுக் கொண்ட பெண்கள் கோவில் குளத்தின் படிக்கட்டில் சாதத்தை வைத்து கைகளை பின்புறமாக கட்டிக்கொண்டு முட்டி போட்டு வாயால் மண் சோறு சாப்பிட்டனர். இதில் சுமார் ஆயிரம் பெண்கள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக நேர்த்திக்கடனாக பால் காவடி, சந்தன காவடி, புஷ்ப காவடி எடுத்து வந்து பக்தர்கள் செலுத்தினர். ஒரு சில பெண்கள் பிறந்த குழந்தைகளை துலாபாரம் மூலமாக வைத்து எடைக்கு எடை காசுகளை காணிக்கையாக வழங்கினர்.

    நிகழ்ச்சியில் சென்னை, காஞ்சீபுரம், மதுரை, திருச்சி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகிய பகுதிகளில் இருந்து குழந்தை வரம் கேட்டு பெண்கள் வந்திருந்தனர்.

    பின்னர் பக்தர்களுக்கு சமபந்தி விருந்து வழங்கப்பட்டது.

    இரவு வள்ளி, தெய்வானை, முருகருக்கு சிறப்பு அலங்காரம் செய்து புஷ்ப பல்லக்கில் மாட வீதி உலா வாணவேடிக்கையுடன் நடந்தது. தொடர்ந்து நாடகம் நடந்தது.

    இதற்கான ஏற்பாடுகளை கோட்டுப்பாக்கம் கிராம மக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

    • பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் குரு பூஜை நடைபெற்றது.
    • நாயன்மார் சன்னதியில் எழுந்தருளி இருக்கும்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் ஆனிமாதம் மகம் நட்சத்தினரம் அன்று ஆண்டுதோறும் ஸ்ரீ மாணிக்கவாசகருக்கு குருபூஜை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று குருபூஜை விழா நடந்தது.இதையொட்டி காலை 10:30 மணி அளவில் நாயன்மார் சன்னதியில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீமாணிக்கவாசகர் பெருமானுக்கு மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் 12 மணியளவில் மகா தீபாரதனை நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜைகளை சுவாமிநாத சிவாச்சாரியார் நடத்தி வைத்தார் . நிகழ்ச்சியில் திரளான சிவனடியார்கள், வார வழிபாட்டு குழுவினர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

    • ஸ்ரீ குரு பாத தரிசன லிங்கத்திற்கு பூர்ண கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • ஆலய வளாகத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரில் உள்ள சித்தர் பீடம் ஸ்ரீ அம்மா பூமாதேவி ஆலயத்தில் குரு பூஜை விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பள்ளியெழுச்சி பூஜை நடைபெற்றது. 5 மணிக்கு மகா கணபதி பூஜை, கும்ப பூஜை, கணபதி ஹோமம், குரு மூல மந்திர ஜெபம், புர்ணாகுதி நடைபெற்றது.

    ஸ்ரீ குரு பாத தரிசன லிங்கத்திற்கு 21 வகையான மாபொடி, மஞ்சள், திரவியம், பால், தேன் மற்றும் சந்தனம், பூர்ண கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு உண்பான் படைத்து சோடனை தீபாராதனையும் உச்சிகால பூஜையும் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு மேல் ஆலய வளாகத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. லட்சுமணன் சுவாமி தலைமையில் ஆலய அர்ச்சகர் செல்வசுப்பிரமணியன் பூஜைகளை செய்தார்.

    இதில் சுப்பாராஜ், சங்கரேஸ்வரி, மாரியப்பன், ஆறுமுகம், லட்சுமணன், ராஜகந்தன், மந்திரமூர்த்தி, கோபால கிருஷ்ணன் திருவிளக்கு பூஜை குழுவினர் மீனாட்சி, பத்மாவதி, காந்திமதி, பூமாரி மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். நிறைவாக பிரசாதம் வழங்கப்பட்டது. இவ்விழா ஏற்பாடுகளை ஸ்ரீ அம்மா பூமாதேவி ஆலய விழா குழுவினர் செய்திருந்தனர்.

    • குரு பாத தரிசன லிங்கத்திற்கு 21 வகையான பூர்ண கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • பூமாதேவி ஆலய வளாகத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரில் உள்ள சித்தர் பீடம் ஸ்ரீ அம்மா பூமாதேவி ஆலயத்தில் குரு பூஜை விழா நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பள்ளியெழுச்சி பூஜை நடைபெற்றது. 5 மணிக்கு மகா கணபதி பூஜை, கும்ப பூஜை, கணபதி ஹோமம், குரு மூல மந்திர ஜெபம், புர்ணாகுதி நடைபெற்றது.

    ஸ்ரீ குரு பாத தரிசன லிங்கத்திற்கு 21 வகையான மாபொடி, மஞ்சள், திரவியம், பால், தேன் மற்றும் சந்தனம், பூர்ண கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு உண்பான் படைத்து சோடனை தீபாராதனையும் உச்சிகால பூஜையும் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு மேல் ஆலய வளாகத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    லட்சுமணன் சுவாமி தலைமையில் ஆலய அர்ச்சகர் செல்வசுப்பிரமணியன் பூஜைகளை செய்தார். இதில் சுப்பாராஜ், சங்கரேஸ்வரி, மாரியப்பன், ஆறுமுகம், லட்சுமணன், ராஜகந்தன், மந்திரமூர்த்தி, கோபால கிருஷ்ணன் திருவிளக்கு பூஜை குழுவினர் மீனாட்சி, பத்மாவதி, காந்திமதி, பூமாரி மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

    நிறைவாக பிரசாதம் வழங்கப்பட்டது. இவ்விழா ஏற்பாடுகளை ஸ்ரீ அம்மா பூமாதேவி ஆலய விழா குழுவினர் செய்திருந்தனர்.

    சண்முக வேலாயுத சுவாமிகளின் 113-வது குருபூஜை விழாவை முன்னிட்டு நந்திகேஸ்வரர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் இந்திர ஞான தங்கரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.
    புதுச்சேரி வெள்ளாழ வீதியில் உள்ள நந்திகேஸ்வரர் கோவிலில் சமாதி கொண்டுள்ள நாடு சண்முக வேலாயுத சுவாமிகளின் 113-வது குருபூஜை விழா 5 நாட்கள் நடைபெற்றது. விழாவின் கடைசி நாளில் குருபூஜை வேள்வி, கலச வழிபாடு, புனிதநீர் வழிபாடு, பேரொளி வழிபாடு, மகேஸ்வர பூஜை, அன்னம் பாலிப்பு நடைபெற்றது. இதனை தொடர்ந்து அன்று மாலை நந்திகேஸ்வரர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் திவான் கந்தப்பா குடும்பத்தினரால் நன்கொடையாக வழங்கப்பட்ட இந்திர ஞான தங்கரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் நந்திகேஸ்வரர், மணக்குள விநாயகருக்கு பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார், பழனி ஆதீனம் சாது சண்முக அடிகளார், மயிலம் பொம்மபுர ஆதினம் சிவஞான பாலய குரு மகா சன்னிதானம் சுவாமிகள் முன்னிலையில் நாடு சண்முக வேலாயுத சுவாமிகள் அறக்கட்டளை நிர்வாகிகள் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மணக்குள விநாயகர் கோவில் தேவஸ்தான உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
    ×