ஆன்மிகம்
சபரிமலை ஐயப்பன் கோவில்

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு

Published On 2020-07-15 05:36 GMT   |   Update On 2020-07-15 05:36 GMT
ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (புதன்கிழமை) திறக்கப்படுகிறது. இன்று மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்து, தீபாராதனை காட்டுவார்.
ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (புதன்கிழமை) திறக்கப்படுகிறது. இன்று மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்து, தீபாராதனை காட்டுவார்.

நாளை (வியாழக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், அபிஷேகம், கணபதி ஹோமம் நடைபெறும். காலை 7.30 மணிக்கு உஷ பூஜை, 9 மணிக்கு கலசாபிஷேகம், 9.30 மணிக்கு உச்ச பூஜைக்கு பின் நடை அடைக்கப்படும். மாலை 5மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும். 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 7.30 மணிக்கு அத்தாளபூஜை, அதன்பிறகு நடை அடைக்கப்படும். 20-ந்தேதி வரை 5 நாட்கள் பூஜைகள் நடைபெறும். 20-ந்தேதி இரவு 7.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படுவதுடன் ஆடி மாத பூஜைகள் நிறைவு பெறும்.

கொரோனா கட்டுப்பாடு விதிகளை பின்பற்றி இந்த மாத பூஜைக்கும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. 20-ந் தேதி பம்பை ஆற்றில் ஆடி அமாவாசை பலி தர்ப்பணம் நடைபெறும்.
Tags:    

Similar News