ஆன்மிகம்
தானம்

ஏழு வகை தானங்களும்- பலன்களும்

Published On 2019-08-18 05:16 GMT   |   Update On 2019-08-18 05:16 GMT
பொருட்களை தானமாக கொடுப்பதால் பல பலன்களை அடைய முடியும். எந்த பொருட்களை தானம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

சிவபெருமான் ஆலயங்களில், 7 வகையான பொருட்களை தானமாக கொடுப்பதால் பல பலன்களை அடைய முடியும். அதாவது எலுமிச்சை, வெல்லம், அவல், மாதுளை, நெல், தேங்காய், பசும்பால் ஆகிய 7 வகையான பொருட்களையும், சிவாலயத்தில் தானமாக அளித்தால், சகல செல்வங்களும் கிடைக்கும்.

கல்வி கற்று வரும் மாணவர்கள், நல்ல முறையில் தங்களது படிப்பை முடித்து வெற்றிபெற, அஸ்த நட்சத்திரம் அன்று, பெருமாள் ஆலயங்களுக்குச் சென்று துளசி மாலை சாத்தி வழிபடுவது நல்லது.

சரஸ்வதி தேவிக்கு, புனர்பூச நட்சத்திர நாளில் அர்ச்சனை ஆராதனை செய்து வழிபட்டாலும், கல்வியில் சிறந்து விளங்கலாம்.
Tags:    

Similar News