ஆன்மிகம்

சஷ்டியில் சரவணபவ மந்திரம்

Published On 2018-11-13 10:01 GMT   |   Update On 2018-11-13 10:01 GMT
கந்த சஷ்டியின் போது சிந்தனை முழுவதும் சஷ்டிக்கவசம் பாராயணம் செய்வதில் இருக்க வேண்டும். சரவணபவ மந்திரத்தை உச்சரித்து முருகப்பெருமானின் அருளைப் பெறுவோம்.
பொதுவாகவே விரதங்களின்போது அந்தந்த தெய்வங்களின் நாமத்தை உச்சரிப்பது நல்லது. அதே போல் கந்த சஷ்டியின் போது சிந்தனை முழுவதும் சஷ்டிக்கவசம் பாராயணம் செய்வதில் இருக்க வேண்டும்.

முடியாதவர்கள் எளிதாக சொல்லக்கூடிய மகாமந்திரமான ‘சரவண பவ’ என்பதைச் சொல்லலாம். எளிய மந்திரமானாலும் அதன் மகிமை அளவிட முடியாதது.

ச- லட்சுமி கடாட்சம்,
ர- சரஸ்வதி கடாட்சம்,
வ- போகம்,
ண-சத்துரு ஜெயம் (எதிரிகள் வெற்றி ),
ப - ம்ருத்தய ஜெயம்,
வ- நோயற்ற வாழ்வு.

எனவே சரவணபவ மந்திரத்தை உச்சரித்து முருகப்பெருமானின் அருளைப் பெறுவோம்.

Tags:    

Similar News