ஆன்மிகம்

தீபாவளிக்கு காவேரி நீராடல்

Published On 2018-11-01 10:05 GMT   |   Update On 2018-11-01 10:05 GMT
தீபாவளி அன்று காவேரியில் நீராடினால் கங்கையில் நீராடிய பலன்களைப் பெறலாம் என்று ஞானநூல்கள் கூறுகின்றன. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் உள்ள புண்ணிய நதிகளில் முதலிடத்தைப் பெறுகிறது கங்கை. கங்கை நதியை தெய்வமாகப் போற்றுவது நமது மரபு. கங்கை நதியில் நீராடுவது எல்லோராலும் இயலாது. எனவே, கங்காதேவியே தீபாவளி நாளில் அனைத்து நீர்நிலைகளிலும் எழுந்தருள்வதாக ‘துலாக் காவேரி மகாத்மியம்‘ கூறுகிறது.

மயிலாடுதுறை வள்ளலார் கோவிலில் கங்காதேவிக்கு தனிசந்நிதி உள்ளது. தீபாவளித் திருநாளில் கங்காதேவி, மயிலாடுதுறை துலாக்கட்டத்திற்கு எழுந்தருளி தீர்த்தவாரி வழங்கும் வைபவம் நடைபெறும். அப்பொழுது பக்தர்கள் நீராடுவது வழக்கம். இது ஆண்டுதோறும் நடைபெறும்.

இது கங்கைக்கும் தீபாவளிக்கும் உள்ள தொடர்பை எடுத்துக்காட்டுவதாக கூறப்படுகிறது. இதனால் தான் காவேரி நதியை தட்சிண கங்கை என்று போற்றுகிறார்கள்.

தீபாவளி அன்று காவேரியில் நீராடினால் கங்கையில் நீராடிய பலன்களைப் பெறலாம் என்று ஞானநூல்கள் கூறுகின்றன.

Tags:    

Similar News