search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவேரி"

    • காவேரி கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
    • குறைந்த அளவு தண்ணீர் விநியோகத்தால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

    ராமேசுவரம்

    ராமேசுவரத்திற்கு வரும் காவேரி கூட்டுகுடிநீர் குழாய் மண்டபம் அருகே உடைப்பு ஏற்பட்டு வெளி யேறும் தண்ணீர் குளம் போல தேங்கி காணப்படுகிறது.

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் நகராட்சியில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய காவேரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 30 லட்சம் தண்ணீர் வழங்க வேண்டும். ஆனால் தண்ணீர் குறைந்த அளவே வரும் நிலையில் நகராட்சி சார்பில் நம்பு நாயகி அம்மன் கோயில் அருகே நகராட்சி நீருற்று நிலையத்தில் உள்ள கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு பற்றாக்குறையை பூர்த்தி செய்து வருகிறது.

    இந்தநிலையில், காவேரி கூட்டு குடிநீர் தீட்டத்தின் மூலம் நாள் தோறும் வழங்கப்படும் 30 லட்சம் லிட்டர் தண்ணீர் தற்போது 80 சதவீதம் குறைந்து நாள் ஒன்றுக்கு 5 லட்சம் வரை மட்டும் தண்ணீர் வழங்கப் படுகிறது. இதனால் ராமேசு வரத்தில் கடுமையாக குடிநீர் தட்டுப்பாடு எற்பட் டுள்ளது.

    மேலும் வாரத்திற்கு 2 நாட்கள் மட்டுமே குடிநீர் வழங்கப்படுவதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் காவேரி கூட்டு குடிநீர் குழாய் மண்டபம் அருகே உடைந்து பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாகி குளம்போல் தேங்கி உள்ளது. இதனால் பொது மக்கள் அவதியடைந்துள் ளனர்.

    சேதமடைந்துள்ள குழாய் உடைப்புகளை சரி செய்ய குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சிறப்பு கனவம் செலுத்தி போர்க்கால அடிப்படையில் சீமைப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் ராமேசுவரம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்ட அனுமதி அளிக்க வேண்டும் என கர்நாடக முதல்வர் குமாரசாமி, பிரதமர் மோடியை இன்று நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார். #Cauvery #Mekedatu #Kumaraswamy #PMModi
    புதுடெல்லி:

    கர்நாடக மாநிலத்தில் காவிரி ஆற்றில் 5-வது அணையாக மேகதாது அணையை 5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் செலவில் கட்டுவதற்கு அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்புதலைப் பெற மத்திய அரசுக்கு கர்நாடக அரசு கடிதம் எழுதியிருந்தது.
     
    ஏற்கனவே கர்நாடகா தண்ணீர் திறந்துவிடுவதில்லை. மேகதாது அணை கட்டினால் உபரி நீர் திறந்து விடுவது சந்தேகம்தான். எனவே கர்நாடகாவை மேகதாது அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். 

    இந்நிலையில், மேகதாது அணை கட்ட அனுமதிக்குமாறு பிரதமர் மோடியிடம் குமாரசாமி நேரில் கோரிக்கை விடுத்துள்ளார். மேகதாது அணை விவகாரத்தில் தமிழக, கர்நாடக அரசுகளை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 

    காலதாமதம் செய்யாமல் மேகதாது அணையை கட்ட மத்திய அரசு ஒத்துழைப்பு தர வேண்டும், தமிழக அரசுடனான அனைத்து பிரச்னைகளையும் தீர்த்து வைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். 

    சமீபத்தில் இதுகுறித்து பேசிய கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் பேசுகையில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் ஒப்புதலை பெற அவசியம் இல்லை என கூறியிருந்தார்.
    ×