ஆன்மிகம்

நவக்கிரக பிள்ளையார்

Published On 2018-08-20 09:14 GMT   |   Update On 2018-08-20 09:14 GMT
கும்பகோணம் மடத்துத் தெருவில் உள்ளது, பகவத் விநாயகர் திருக்கோவில். இந்த கோவிலில் தான் நவக்கிரக விநாயகரும் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.
கும்பகோணம் மடத்துத் தெருவில் உள்ளது, பகவத் விநாயகர் திருக்கோவில். இங்கு தான் நவக்கிரக விநாயகரும் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இவர் சூரியனை நெற்றியிலும், சந்திரனை நாபிக் கமலத்திலும், செவ்வாயை வலது தொடையிலும், புதனை வலது கீழ் கையிலும்,

வியாழனை சிரசிலும், வெள்ளியை இடது கீழ் கையிலும், சனியை வலது மேல் கையிலும், ராகுவை இடது மேல் கையிலும், கேதுவை இடது தொடையிலும் கொண்டு காட்சி தருகிறார். இவரை வழிபட்டால் நவக்கிரகங்களைச் சுற்றி வந்த பலன் கிடைப்பதோடு, நவக்கிரக தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம். 
Tags:    

Similar News