ஆன்மிகம்
பழனி மலைக்கோவிலில் குவிந்த பக்தர்கள்
விடுமுறை தினமான நேற்று மலைக்கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். இதன் காரணமாக படிப்பாதை, யானைப்பாதை, மின் இழுவை நிலையம் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாக பழனி விளங்குகிறது. இங்கு தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் மட்டுமின்றி ஆண்டு முழுவதும் மலைக்கோவிலுக்கு பக்தர்கள் வருகை தருவர். இதேபோல் விடுமுறை தினங்களிலும் பக்தர்களின் வருகை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.
அந்த வகையில், விடுமுறை தினமான நேற்று மலைக்கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். இதன் காரணமாக படிப்பாதை, யானைப்பாதை, மின் இழுவை நிலையம் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மலைக்கோவில் வெளிப்பிரகாரம், பொது, கட்டணம், சிறப்பு தரிசன வழிகளிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஒரு மணி நேரம் காத்திருந்த பின்னரே பக்தர்களால் சாமி தரிசனம் செய்ய முடிந்தது.
வழக்கமாக விடுமுறை தினங்களில் கேரள மாநிலத்தவர்கள் பழனி மலைக்கோவிலுக்கு அதிக அளவில் வருகை தருவார்கள். ஆனால் கேரள மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் பழனிக்கு கேரள பக்தர்கள் வருகை குறைவாகவே இருந்தது.
அந்த வகையில், விடுமுறை தினமான நேற்று மலைக்கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். இதன் காரணமாக படிப்பாதை, யானைப்பாதை, மின் இழுவை நிலையம் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மலைக்கோவில் வெளிப்பிரகாரம், பொது, கட்டணம், சிறப்பு தரிசன வழிகளிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஒரு மணி நேரம் காத்திருந்த பின்னரே பக்தர்களால் சாமி தரிசனம் செய்ய முடிந்தது.
வழக்கமாக விடுமுறை தினங்களில் கேரள மாநிலத்தவர்கள் பழனி மலைக்கோவிலுக்கு அதிக அளவில் வருகை தருவார்கள். ஆனால் கேரள மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் பழனிக்கு கேரள பக்தர்கள் வருகை குறைவாகவே இருந்தது.