ஆன்மிகம்
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி ஆவணி திருவிழா தொடங்கியது
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலை மைப்பதியில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
குமரி மாவட்டத்தில் உள்ள சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் ஆவணி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற த்தையொட்டி அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதல், 5 மணிக்கு நடைதிறப்பு, 6 மணிக்கு கொடிப்பட்டம் தயாரித்தல், காலை 7 மணிக்கு கொடியேற்றமும் நடந்தது.
தலைமைப்பதி தலைமை குரு பாலபிரஜாபதி அடிகளார், பக்தர்களின் அய்யா சிவசிவா அரகரா அரகரா என்ற பக்தி கோஷத்திற்கு இடையே திருக்கொடியை ஏற்றி வைத்தார். தலைமைப்பதி குருக்கள் பால ஜனாதிபதி, பாலலோகாதிபதி, பையன், கிருஷ்ணராஜ், ராஜவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு இனிமம் வழங்கப்பட்டது.
காலை 8 மணிக்கு தலைமைப்பதியை சுற்றி அய்யாவின் வாகன பவனி நடந்தது. நண்பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்ன தர்மம், இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நெல்லை, தூத்துக்குடி, குமரி மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அய்யாவழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
2-ம் திருவிழாவான இன்று (சனிக்கிழமை) காலை பணிவிடை, உச்சிபடிப்பு, இரவு 7 மணிக்கு வாகன பவனியும், அன்னதானமும் நடக்கிறது.
தலைமைப்பதி தலைமை குரு பாலபிரஜாபதி அடிகளார், பக்தர்களின் அய்யா சிவசிவா அரகரா அரகரா என்ற பக்தி கோஷத்திற்கு இடையே திருக்கொடியை ஏற்றி வைத்தார். தலைமைப்பதி குருக்கள் பால ஜனாதிபதி, பாலலோகாதிபதி, பையன், கிருஷ்ணராஜ், ராஜவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு இனிமம் வழங்கப்பட்டது.
காலை 8 மணிக்கு தலைமைப்பதியை சுற்றி அய்யாவின் வாகன பவனி நடந்தது. நண்பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்ன தர்மம், இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நெல்லை, தூத்துக்குடி, குமரி மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அய்யாவழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
2-ம் திருவிழாவான இன்று (சனிக்கிழமை) காலை பணிவிடை, உச்சிபடிப்பு, இரவு 7 மணிக்கு வாகன பவனியும், அன்னதானமும் நடக்கிறது.