ஆன்மிகம்

காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் சிறப்பு பூஜை

Published On 2018-07-13 03:54 GMT   |   Update On 2018-07-13 03:54 GMT
ஆனி அமாவாசையையொட்டி காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
சேலம் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியில் காவடி பழனியாண்டவர் ஆசிரமம் உள்ளது. ஆனி அமாவாசையையொட்டி நேற்று ஆசிரமத்தில் சிறப்பு பூஜை நடந்தது. மாலை 5 மணிக்கு ஐம்பொன்னால் ஆன 20 சித்தர் சிலைகளுக்கு மூலிகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிலைகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு புஷ்பாஞ்சலி பூஜையும், அதைத்தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது.

மேலும் 108 லட்சுமி ஸ்தாபிதமும், 5 லட்சுமி சிலைகளை கொண்டு வந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த பூஜைக்கான ஏற்பாடுகளை ஆசிரமத்தின் நிர்வாகிகள் சோமசுந்தரம், செல்வி ஆகியோர் செய்திருந்தனர். 
Tags:    

Similar News