ஆன்மிகம்

சிதம்பரபுரம் நாராயணசுவாமி கோவில் தேரோட்டம்

Published On 2018-07-03 09:42 GMT   |   Update On 2018-07-03 09:42 GMT
சிதம்பரபுரம் ஸ்ரீமந் நாராயணசுவாமி கோவில் திருநாளான நேற்று (திங்கட்கிழமை) தேரோட்டம் நடந்தது. இதனை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அய்யா நாராயணசுவாமி தேருக்கு எழுந்தருளினார்.
களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் ஸ்ரீமந் நாராயணசுவாமி கோவில் 89-வது ஆனி மாத தேரோட்ட திருவிழா கடந்த 22-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினசரி அய்யா நாராயணசுவாமி வெவ்வேறு வாகனங்களில் திருவீதி உலா வருதல் மற்றும் சிறப்பு கலை நிகழ்ச்சிகளும் நடந்து வந்தது.

8-ம் திருநாளான கடந்த 29-ந் தேதி மாலை பரிவேட்டை விழா நடந்தது. 11-ம் திருநாளான நேற்று (திங்கட்கிழமை) தேரோட்டம் நடந்தது. இதனை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அய்யா நாராயணசுவாமி தேருக்கு எழுந்தருளினார். அதன் பிறகு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா குழுவினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News