search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "narayanaswamy temple"

    • அம்பை அருகே உள்ள வாகைக்குளம் வாகைபதி அய்யா ஸ்ரீமன் நாராயணசாமி கோவிலில் இந்த ஆண்டு ஆவணி தேரோட்டத்திருவிழா கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்ட திருவிழா நேற்று மாலை நடந்தது.

    வி.கே.புரம்:

    அம்பை அருகே உள்ள வாகைக்குளம் வாகைபதி அய்யா ஸ்ரீமன் நாராயணசாமி கோவிலில் இந்த ஆண்டு ஆவணி தேரோட்டத்திருவிழா கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தினமும் அய்யா தண்டில் வாகனம், கருட வாகனம், உள்ளிட்ட 11 வாகனங்களில் வீதி உலா வந்து மக்களுக்கு காட்சி அளித்து அருள் பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 8 மற்றும் 10-ம் திருவிழாக்களில் பால்குடம் எடுத்தல், சந்தன குடம் எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. விழா ஆரம்பித்த நாள் முதல் தினமும் உகப்படிப்பு, உச்சிப்படிப்பு, பணிவிடை, பால் தர்மம் மற்றும் இரவு 8 மணிக்கு மேல் அன்ன தர்மம் உள்ளிட்ட நிகழ்ச்சி நடந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்ட திருவிழா நேற்று மாலை நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் அய்யா ஸ்ரீ மன் நாராயணசாமி எழுந்தருளி கோவிலை பவனி வந்தார். இதில் சுற்று வட்டார பகுதி மக்கள் திரளாக பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    நிகழ்ச்சியில் வாகைபதி இளைஞர் குழுவினரின் செண்டை, சிங்காரி மற்றும் நையாண்டி மேளத்துடன் சிறப்பு வானவேடிக்கையும், சிறுமிகளின் கோலாட்டம் நடந்தது. இரவு 11 மணிக்கு அய்யா காளை வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை வாகைபதி அன்பு கொடிமக்கள் செய்திருந்தனர்.

    சிதம்பரபுரம் ஸ்ரீமந் நாராயணசுவாமி கோவில் திருநாளான நேற்று (திங்கட்கிழமை) தேரோட்டம் நடந்தது. இதனை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அய்யா நாராயணசுவாமி தேருக்கு எழுந்தருளினார்.
    களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் ஸ்ரீமந் நாராயணசுவாமி கோவில் 89-வது ஆனி மாத தேரோட்ட திருவிழா கடந்த 22-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினசரி அய்யா நாராயணசுவாமி வெவ்வேறு வாகனங்களில் திருவீதி உலா வருதல் மற்றும் சிறப்பு கலை நிகழ்ச்சிகளும் நடந்து வந்தது.

    8-ம் திருநாளான கடந்த 29-ந் தேதி மாலை பரிவேட்டை விழா நடந்தது. 11-ம் திருநாளான நேற்று (திங்கட்கிழமை) தேரோட்டம் நடந்தது. இதனை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அய்யா நாராயணசுவாமி தேருக்கு எழுந்தருளினார். அதன் பிறகு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா குழுவினர் செய்திருந்தனர்.
    உடையப்பன் குடியிருப்பு நாராயணசாமி கோவில் ஆனி திருவிழா தேரோட்டம் நடந்தது. கொட்டும் மழையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலனியை அடுத்த உடையப்பன் குடியிருப்பு ஸ்ரீமன் நாராயணசாமி கோவிலில் ஆனி மாத தேர் திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழா நாட்களில் பணிவிடை, உச்சிப்படிப்பு, அன்னதானம், அய்யா வாகன பவனி என பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. 10-ம் நாள் திருவிழாவன்று மாலை அய்யா இந்திர வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது.

    விழாவின் இறுதி நாளான நேற்று காலையில் பணிவிடை, உகப்படிப்பு நடந்தது. அதைத்தொடர்ந்து பிற்பகல் 3 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. அப்போது மழை கொட்டியது. அதிலும் திரளான அய்யாவழி பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். ஆஞ்சநேயர் தேர் முன் செல்ல செம்பவள பஞ்சவர்ண தேர், யானை முன் செல்ல சிங்காரி மேளம் முழங்க நாதஸ்வர கச்சேரியுடன் அய்யாவழி மக்கள் காவிக்கொடியுடன் கோஷங்கள் எழுப்பியவாறு வீதி உலா வந்தனர்.

    இந்த தேர் கோவிலில் இருந்து புறப்பட்டு மேல உடையப்பன் குடியிருப்பு, கோவில் விளை சந்திப்பு வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. கோவில்விளை சந்திப்பில் அன்னதானம் நடைபெற்றது. இரவு 9 மணிக்கு கிராமிய நடனம், நள்ளிரவு 2 மணிக்கு திருக்கொடியிறக்கம், இனிப்பு வழங்குதல் ஆகியவை நடைபெற்றது. தேரோட்ட நிகழ்ச்சியில் தொழிலதிபர் முத்தழகன், ஈஸ்வர்சிங், சிவானந்தன், ஸ்ரீகாந்தி அன்பு, கந்தசுவாமி நாடார் சன்ஸ் உரிமையாளர் ராஜலிங்கம், தேர் கொடிமர ஸ்தபதி முத்துராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை ஊர் தலைவர் என்.பிச்சைப்பழம் தலைமையில் துணை தலைவர் தங்க கணேசன், செயலாளர் பாலகிருஷ்ணன், இணை செயலாளர் கிருஷ்ணராஜா, பொருளாளர் கிருஷ்ணராஜ் மற்றும் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள், ஊர் மக்கள் இணைந்து செய்து இருந்தனர். 
    ×