ஆன்மிகம்
நெல்லையப்பர் கோவிலில் அப்பர் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடந்த போது எடுத்த படம்.

நெல்லையப்பர் கோவிலில் அப்பர் பெருமானுக்கு சிறப்பு பூஜை

Published On 2018-05-10 04:57 GMT   |   Update On 2018-05-10 04:57 GMT
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் அப்பர் பெருமானுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. வரலாற்றை நினைவு கூறும் வகையில் சில விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. அப்பர் பெருமான், நெல்லையப்பருக்குள் ஐக்கியமானதாக புராணங்களில் கூறப்படுகிறது. அதை நினைவு படுத்தும் வகையில் நெல்லையப்பர் கோவிலில் அப்பர் குருபூஜை விழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான பூஜை நேற்று நடந்தது. இதையொட்டி நெல்லையப்பர், காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடந்தன.

நெல்லையப்பர் சன்னதி முன்புள்ள நந்தி அருகே உள்ள மண்டபத்தில் அப்பர் பெருமானுக்கு கும்பம் வைத்து சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து நேற்று இரவு அப்பர் வெள்ளி சப்பரத்தில் வீதி உலா வருதல் நடந்தது. அவர் 4 ரத வீதிகளையும் சுற்றி கோவிலை வந்தடைந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் ரோஷினி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர். 
Tags:    

Similar News