ஆன்மிகம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 14-ந் தேதி அன்னாபிஷேகம்

Published On 2018-04-11 07:59 GMT   |   Update On 2018-04-11 07:59 GMT
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வருகிற 14-ந் தேதி (சனிக்கிழமை) அன்னாபிஷேகம் நடக்கிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வருகிற 14-ந் தேதி (சனிக்கிழமை) அன்னாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி அன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.

பின்னர் சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. காலை 10 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும், சுவாமி சண்முகருக்கு அன்னாபிஷேகம் நடக்கிறது. பகல் 12 மணிக்கு சிறப்பு அன்னதானம் நடக்கிறது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், பின்னர் 5 மணிக்கு விளக்கு பூஜை நடக்கிறது.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோவில் கலையரங்கில் நாளை மறுநாள் காலை 8 மணி முதல் பக்தி இன்னிசை, பக்தி சொற்பொழிவு, கோவில் பொது விபர குறிப்பேடு வெளியிடும் நிகழ்ச்சி போன்றவை நடக்கிறது.

மாலை 3 மணிக்கு திருச்செந்தூர் 4-வது வார்டு இந்து தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சியும், தொடர்ந்து மெஞ்ஞானபுரம் அக்னி தனிப்பயிற்சி கல்வி நிலைய மாணவ, மாணவிகளின் பல்சுவை நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News