ஆன்மிகம்

வயலூர் முருகன் கோவிலில் இன்று வள்ளி திருக்கல்யாணம் நிகழ்ச்சி

Published On 2018-04-03 03:56 GMT   |   Update On 2018-04-03 03:56 GMT
வயலூர் முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழாவின் நிறைவு நாளான இன்று(செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு வள்ளி திருக்கல்யாணம் நடக்கிறது.
வயலூர் முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா கடந்த 30-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இதையொட்டி கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

பக்தர்கள் பால் காவடி, பறவை காவடி உள்ளிட்ட காவடிகள் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு வள்ளி தினைப்புனம் காத்தல் நிகழ்ச்சியும், நேற்று இரவு முருகன் வேலன், வேடன் விருத்தனாக வருதல் நிகழ்ச்சியும், அதன்பின் யானை விரட்டல் காட்சியும் நடைபெற்றன.

விழாவின் நிறைவு நாளான இன்று(செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு வள்ளி திருக்கல்யாணம் நடக்கிறது. இத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
Tags:    

Similar News