ஆன்மிகம்

திருவானைக்காவல் கோவிலில் பிட்டுக்கு மண் சுமந்த வைபவம்

Published On 2017-09-01 03:24 GMT   |   Update On 2017-09-01 03:24 GMT
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த வைபவம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
பஞ்சபூதங்களில் நீர் ஸ்தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில். இங்கு ஆண்டுதோறும் ஆவணி மாதம் மூல நட்சத்திரத்தில் சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த வைபவம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

இதனையொட்டி நேற்று மாலை 5.30 மணியளவில் ஜம்புகேஸ்வர் வெள்ளி குதிரை வாகனத்திலும், அகிலாண்டேஸ்வரி பல்லக்கிலும் கோவிலில் இருந்து புறப்பட்டு 6.30 மணியளவில் திருவானைக்காவல் வெள்ளிக்கிழமைசாலை அருகே உள்ள திருமஞ்சன காவிரி கரையை வந்தடைந்தனர்.

அங்கு திரிசூலத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. பின்னர் பிட்டுக்கு மண் சுமந்த வைபவம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து உற்சவர் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News