ஆன்மிகம்

முருகப்பெருமானின் ஆறுமுகங்கள் என்னென்ன?

Published On 2017-08-18 06:40 GMT   |   Update On 2017-08-18 06:40 GMT
முருகப்பெருமானை ஆறுமுகன் என்று பக்தர்களால் அன்பாக அழைக்கப்படுகிறார். அந்த ஆறுமுகம் என்னென்ன? என்று விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
முருகப் பெருமானை ஆறுமுகன் என்று சொல்லுவோம். அந்த ஆறுமுகம் என்னென்ன?

1) சிவனுக்கு ஞானமொழியாக, ஓங்காரத்தில் பொருளை விளக்கிய பேசும் முகம் ஒன்று.

2) வள்ளியை திருணம் செய்ய வந்த முகம் ஒன்று.

3) அடியவர்களின் வினைகளை தீர்க்கின்ற முகம் ஒன்று.

4) குன்றில் சம்ஹாரம் செய்ய அன்னையிடம் வேல் வாங்கிய முகம் ஒன்று.

5) சூரனை வதைத்த முகம் ஒன்று.

6) வாகனமான மயில் மீது ஏறி விளையாடும் முகம் ஒன்று.
Tags:    

Similar News