ஆன்மிகம்

அரச மரம் சுற்றினால் கிடைக்கும் பலன்

Published On 2017-08-17 09:14 GMT   |   Update On 2017-08-17 09:14 GMT
பொதுவாக வரம் தரும் மரங்களில் முதல் மரம் அரசமரமாகும். இம்மரத்தைச் சுற்றி வந்தால் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரின் அருளும் நமக்குக் கிடைக்கும்.
மரங்களின் அரசன் என்று போற்றப்படுவது, அரச மரமாகும். இதில் மும்மூர்த்திகளும் வாசம் செய்வதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. தேவலோகத்து மரம் என்றும் அரச மரத்தை வர்ணிப்பார்கள். இம்மரத்தைச் சுற்றி வந்தால் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரின் அருளும் நமக்குக் கிடைக்கும். அக்னிபகவான் குதிரை ரூபம் எடுத்து ஓடி, அரசமரத்தில் புகுந்து கொண்டதால் இம்மரத்தின் குச்சிகளை ஹோமங்களுக்கு பயன் படுத்துகிறோம்.

பிரம்மாவின் சக்தி இம்மரத்தில் இருப்பதால் அரசமரக்காற்றை நாம் சுவாசித்தால் ஆயுளும் வளரும். ஆரோக்கியம் சீராகும். புத்திர பாக்கியம் கிடைக்கும். அரசமர இலைகளின் சலசலப்பு ஆலய மணிபோல இருக்கும். அரசமரத்தடியில் விநாயகப் பெருமானையும், நாகராஜனையும் வைத்து வழிபடுவது வழக்கம். இவர்களை வழிபட்டால் காரியத்தடைகள் அகலும். கனிவான வாழ்க்கை அமையும்.

பொதுவாக வரம் தரும் மரங்களில் முதல் மரம் அரசமரமாகும். எனவே வரம் தரும் மரத்தை வணங்குவோம். அது தரும் பலன்களால் மகிழ்ச்சியைப் பெறுவோம்.
Tags:    

Similar News