ஆன்மிகம்

மகிழ்ச்சி தரும் மாங்கனி விநாயகர்

Published On 2017-08-16 07:42 GMT   |   Update On 2017-08-16 07:42 GMT
புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கை வாசல் வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள மாம்பழ விநாயகரை வழிபட்டால் மனம் இனிக்கும் செய்திகள் வந்து சேரும்.
ஞானப்பழத்தைக் கேட்டு பிள்ளையாருக்கும், முருகனுக்கும் போட்டி நடைபெற்ற பொழுது, ‘இந்த உலகத்தை யார் முதலில் சுற்றி வருகிறார்களோ, அவர்களுக்குத் தான் பழம்’ என்று உமையவளும், சிவனும் கூறினார்கள்.

அந்த முடிவைக் கேட்டு முருகப்பெருமான் மயிலில் ஏறி உலகை வலம்வரத் தொடங்கினார். அவர் வருவதற்குள், பெற்றோரை வலம் வந்து, ‘தாய்-தந்தையரை வலம் வந்தால் உலகத்தைச் சுற்றியதற்குச் சமம்’ என்று சொல்லி பழத்தைப் பெற்றுக் கொண்டார் விநாயகர்.

அங்ஙனம் மாம்பழ விநாயகராக காட்சியளிக்கும் கோலம் புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கை வாசல் வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோவிலில் இருக்கிறது. இந்த மாம்பழ விநாயகரை வழிபட்டால் மனம் இனிக்கும் செய்திகள் வந்து சேரும்.
Tags:    

Similar News