ஆன்மிகம்

பழனி முருகன் கோவிலில் ஆடி கார்த்திகை விழா

Published On 2017-08-16 05:34 GMT   |   Update On 2017-08-16 05:34 GMT
பழனி முருகன் கோவிலில் ஆடி கார்த்திகை விழாவையொட்டி பாலசுப்பிரமணியருக்கு அலங்காரமும் செய்யப்பட்டு இருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பழனி முருகன் கோவிலில் ஆடி கார்த்திகை விழாவையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும், காலை 6.30 மணிக்கு விளா பூஜையில் முருகனுக்கு சந்நியாசி அலங்காரமும், காலை 8 மணிக்கு சிறுகாலசந்தி பூஜையில் வேடன் அலங்காரமும், காலை 9 மணிக்கு கால சந்திபூஜையில் பாலசுப்பிரமணியர் அலங்காரமும் செய்யப்பட்டு இருந்தது.

பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையில் வைதீகர் அலங்காரமும், மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையில் ராஜ அலங்காரமும், இரவு 9 மணிக்கு ராக்காலபூஜையில் வெள்ளை நிற மலர்களால் சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. ஆடிக்கார்த்திகை விழாவை முன்னிட்டு மலைக்கோவிலில் தர்ம தரிசனம், சிறப்பு தரிசனம், கட்டளை தரிசனம், கால பூஜை தரிசனத்திற்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மாலை 6 மணிக்கு மலைக்கோவில் தெற்கு வெளிப்பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. 6.40 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் சின்னகுமாரர் எழுந்தருளி உட்பிரகாரத்தில் வலம் வந்தார். தொடர்ந்து 7.15 மணிக்கு சின்னக்குமாரர் தங்கரதத்தில் எழுந்தருளினார். தங்கரத புறப்பாட்டிற்கு 154 பக்தர்கள் தலா ரூ.2 ஆயிரம் செலுத்தி புறப்பாட்டில் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் மேனகா ஆகியோர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News