ஆன்மிகம்

மண்டைக்காடு கோவிலில் 3-ம் நாள் திருவிழாவில் வெள்ளி பல்லக்கில் அம்மன் ஊர்வலம்

Published On 2017-03-01 03:17 GMT   |   Update On 2017-03-01 03:17 GMT
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழாவில் 3-வது நாளான நேற்று அம்மன் வெள்ளி பல்லக்கில் ஊர்வலம் வருதல் நடந்தது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா கடந்த 26-ந் தேதி தொடங்கியது. திருவிழா வருகிற 7-ந் தேதி வரை நடக்கிறது. விழாவில் 3-வது நாளான நேற்று அம்மன் வெள்ளி பல்லக்கில் ஊர்வலம் வருதல் நடந்தது.

5-ம் திருவிழாவான நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு சமயமாநாடும் நடைபெறுகிறது. மாலை 3 மணிக்கு பேச்சிவிளாகம் இசக்கியம்மன் கோவிலில் இருந்து சந்தனகுடங்கள் நிரப்பப்பட்டு மணவாளக்குறிச்சி மணல்ஆலை வளாகத்திற்கு கொண்டு வரப்படுகிறது.



பின்னர், அங்கிருந்து சந்தன குடம் ஏந்திய பக்தர்கள் ஊர்வலமாக செல்கிறார்கள். அப்போது யானை மீது களபம் எடுத்து செல்லப்படுகிறது. இந்த ஊர்வலம், பிள்ளையார் கோவில், பரப்பற்று, கூட்டுமங்கலம் வழியாக மண்டைக்காடு கோவிலை வந்தடைகிறது. மாலை 6.30 மணிக்கு சிறப்பு நாதஸ்வரத்துடன் சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

இரவு 7 மணிக்கு ஆன்மிக உரையும், சமயமாநாடும் நடை பெறுகிறது. இதற்கு மணல்ஆலை தலைவர் ஜெனா தலைமை தாங்குகிறார். இணை அதிகாரி ரவிசங்கர், கருணாகரன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

Similar News