ஆன்மிகம்

மாசி மாத அமாவாசையையொட்டி சரநாராயண பெருமாளுக்கு சிறப்பு பூஜை

Published On 2017-02-27 07:57 GMT   |   Update On 2017-02-27 07:57 GMT
பண்ருட்டி அருகே திருவதிகையில் சரநாராயண பெருமாள் கோவிலில் மாசி மாத அமாவாசையான நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பண்ருட்டி அருகே திருவதிகையில் சரநாராயண பெருமாள் கோவில் உள்ளது. இங்கு அமாவாசை தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி மாசி மாத அமாவாசையான நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக மூலவர் சரநாராயண பெருமாள், செங்கமலத்தாயாருக்கு தேன், பால், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட பலவிதமான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதேபோல் உற்சவர் பெருமாள் அங்குள்ள கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் அமைச்சர் எம்.சி. சம்பத் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Similar News