ஆன்மிகம்
வடகராம்பூண்டியில் சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
ராமநத்தம் அருகே வடகராம்பூண்டியில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ராமநத்தம் அருகே உள்ள வடகராம்பூண்டியில் சித்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலை சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்த அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர். அதன்படி கோவிலில் திருப்பணிகள் நடந்து, நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் கணபதி ஹோமம், விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி, யாகசாலை பூஜை, பூர்ணாகுதி, கடம் புறப்பாடு நடைபெற்றது.
இதில் யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீர் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கோவில் கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து அங்கிருந்த பக்தர்கள் மீதும் புனிதநீர் தெளிக்கப்பட்டது. பின்னர் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை, நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
இதில் யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீர் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கோவில் கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து அங்கிருந்த பக்தர்கள் மீதும் புனிதநீர் தெளிக்கப்பட்டது. பின்னர் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை, நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.