ஆன்மிகம்
வேண்டுதல்களை நிறைவேற்றும் அனுமன் வழிபாடு
48 நாட்கள் அனுமனின் வாலில் பொட்டு வைத்து வழிபாடு செய்து வந்தால் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது ஐதீகம். இதுகுறித்து கீழே விரிவாக பார்க்கலாம்.
அனுமனுக்கு அவரது வாலில் அதிக வலிமை உண்டு. ராவண சபையில் தன்னுடைய வாலில் துணியை சுற்றி நெருப்பு வைத்த போது, அந்த நெருப்பு அவரை ஒன்றுமே செய்யவில்லை. மாறாக இலங்கையைத்தான் அந்த தீ சுட்டுப் பொசுக்கியது.
அதே போல் தான் அமர சிம்மாசனம் தராமல் அவமதித்த ராவணனின் முன்பு, தன்னுடைய வாலையே மிகப்பெரிய சிம்மாசனமாக மாற்றிக்கொண்டு, அதன் மீது அமர்ந்தார் அனுமன். ராமாயணத்தில் வரும் இதுபோன்ற நிகழ்வுகளே அவரது வாலின் பெருமையை உணர்த்துவதாக அமைந்துள்ளன.
பக்தர்கள் ஆஞ்சநேயரின் வால் தொடங்கும் இடம் முதல் வால் நுனி வரை தினமும் ஒரு பொட்டு சந்தனம் வைத்து குங்குமம் வைத்து வழிபட்டு வர வேண்டும். நுனி வரை சந்தனம் வைத்து முடிந்த நாளில் வடை மாலை சாற்றி வழிபட வேண்டும். இவ்வாறு செய்வது நன்மை தரும்.
அதே போல் தான் அமர சிம்மாசனம் தராமல் அவமதித்த ராவணனின் முன்பு, தன்னுடைய வாலையே மிகப்பெரிய சிம்மாசனமாக மாற்றிக்கொண்டு, அதன் மீது அமர்ந்தார் அனுமன். ராமாயணத்தில் வரும் இதுபோன்ற நிகழ்வுகளே அவரது வாலின் பெருமையை உணர்த்துவதாக அமைந்துள்ளன.
பக்தர்கள் ஆஞ்சநேயரின் வால் தொடங்கும் இடம் முதல் வால் நுனி வரை தினமும் ஒரு பொட்டு சந்தனம் வைத்து குங்குமம் வைத்து வழிபட்டு வர வேண்டும். நுனி வரை சந்தனம் வைத்து முடிந்த நாளில் வடை மாலை சாற்றி வழிபட வேண்டும். இவ்வாறு செய்வது நன்மை தரும்.