ஆன்மிகம்

தோஷங்கள் குறைய ஏழைகளுக்கு தானம் செய்யுங்கள்

Published On 2016-12-17 06:15 GMT   |   Update On 2016-12-17 06:15 GMT
அனைத்து விதமான தோஷங்களும் நீங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஏழைகளுக்கு தொடர்ந்து தானங்களை செய்து வந்தால் தோஷங்கள் படிப்படியாக குறையும்.
செவ்வாய்க்குரிய அதிதேவதையான முருகனை வழிபடுவது கோதுமை ரொட்டி, வெள்ளை எள் கலந்த இனிப்பு பலகாரங்கள், துவரை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் கொடுப்பது நல்லது.

செவ்வாய்கிழமைகளில் விரதமிருந்து செவ்வாய் பகவானுக்கு விளக்கேற்றுவது, சஷ்டி விரதம், கிருத்திகை விரதம் மேற் கொள்வது, தினமும் கந்தசஷ்டி கவசம் படிப்பது நல்லது.

செவ்வாய்க்குரிய கல்லான பவளக்கல்லை மோதிரத்தில் பதித்து அணிவது சிவப்பு நிற ஆடையை அணிந்து கொள்வது, செப்புப் பாத்திரங்களை உபயோகிப்பது போன்றவற்றால் செவ்வாயால் உண்டாகக்கூடிய தோஷங்கள் குறையும். செவ்வாய்க்கு செய்யும் பரிகாரங்கள் அனைத்தும் முருகனுக்கு உகந்தது என்பதால் முருகனின் திருவருளும் கிட்டும்.

Similar News