கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் - கடைசி நிமிடத்தில் வெளியேறிய இங்கிலாந்து வீரர்

Published On 2024-01-21 11:18 GMT   |   Update On 2024-01-21 11:18 GMT
  • முதல் டெஸ்ட் போட்டி 25-ம் தேதி நடைபெறுகிறது.
  • மாற்று வீரர் விரைவில் அறிவிக்கப்படுவார்.

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் செய்யும் இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. ஜனவரி 25-ம் தேதி இரு அணிகள் இடையே முதல் டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில், இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இங்கிலாந்து அணியின் ஹாரி புரூக் விலகுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்து உள்ளது. ஹாரி புரூக் விலகிய நிலையில், அவருக்கு மாற்று வீரர் விரைவில் அறிவிக்கப்படுவார் என்று இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது.

 


"தனிப்பட்ட காரணங்களுக்காக ஹாரி புரூக் உடனடியாக இங்கிலாந்துக்கு திரும்புகிறார். இதன் காரணமாக அவர் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாட மாட்டார்," என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

கடந்த 2022-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானவர் ஹாரி புரூக். முன்னதாக இவர் கடந்த ஜூலை மாதம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக களமிறங்கினார்.

24 வயதான ஹாரி புரூக் இதுவரை 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இதில் 1181 ரன்களை குவித்துள்ளார். இதில் நான்கு சதங்கள், ஏழு அரைசதங்கள் அடங்கும்.

Tags:    

Similar News