சினிமா

மீண்டும் தள்ளிப்போகிறதா ரஜினிகாந்த்தின் 2.0?

Published On 2018-08-20 06:42 GMT   |   Update On 2018-08-20 06:42 GMT
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகி வரும் 2.0 படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் இழுத்தடிப்பதால் ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. #2Point0 #Rajinikanth
‌ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான படம் எந்திரன். இதன் இரண்டாம் பாகமாக 2.0 பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. படத்தில் நாயகியாக ஏமி ஜாக்சனும், வில்லனாக இந்தி நடிகர் அக்‌‌ஷய் குமாரும் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து, கிராபிக்ஸ் காட்சிகளுக்கான பணிகள் நடந்து வருகிறது.

ரூ.450 கோடி செலவில் உருவாகும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தொடர்ந்து தள்ளிப்போய் வந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வருகிற நவம்பர் 29-ஆம் தேதி படம் ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்தது.

ஹாலிவுட் படங்களுக்கு இணையாக இந்த படத்தில் கிராபிக்ஸ் மிரட்டல்கள் இருக்கும் என்று பேசப்படுகிறது. இந்திய படங்களில் பாகுபலி கிராபிக்ஸ் சாதனைகளில் பேசப்பட்ட படமாக இருந்தது. அந்த படத்தை 2.0 மிஞ்சும் என்றும் கூறுகின்றனர். 



இந்த நிலையில் 2.0 படத்தின் கிராபிக்ஸ் பணிகளில் மேலும் தாமதம் ஏற்பட்டு உள்ளது என்றும், எனவே படம் அடுத்த வருடத்துக்கு தள்ளிப்போகும் என்றும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி உள்ளது. எனினும் படக்குழுவினர் இதனை உறுதிப்படுத்தவில்லை. திட்டமிட்டபடி நவம்பர் 29-ந்தேதி படத்தை திரைக்கு கொண்டு வரும் முயற்சியில் படக்குழுவினர் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. #2Point0 #Rajinikanth #AmyJackson

Tags:    

Similar News