சினிமா

தமிழர் தமிழால் இணைவோம் - கமல்ஹாசன் தமிழ் புத்தாண்டு வாழ்த்து

Published On 2018-04-14 07:17 GMT   |   Update On 2018-04-14 07:17 GMT
‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முழங்குவோம்’, தமிழர் தமிழால் இணைவோம் என்று கூறி மக்கள் நீதி மய்யக் கட்சி தலைவர் கமல்ஹாசன் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். #KamalHaasan #TamilNewYear
தமிழ் புத்தாண்டையொட்டி பல்வேறு தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

புதியகட்சி தொடங்க ஏற்பாடு செய்துவரும் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தியில், ‘வாழ்க்கையே போராட்டமாகிவிட்ட இந்த சூழலில் தமிழ் புத்தாண்டு பிறக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து தனது தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து கமல்ஹாசன் அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அண்ணல் அம்பேத்கர் பிறந்த இந்நன்னாளில், அவர் இயற்றிய அரசியல் சாசனத்தின் வழிநடப்போம் என உறுதி ஏற்போம்.



மத்திய, மாநில அரசுகளும் அந்த அரசியல் சாசனத்தைப் பின்பற்றி, தமிழர்களின் கோரிக்கை நிறைவேறும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும் என்று முழங்குவோம். தமிழர் தமிழால் இணைவோம். நாளை நமதே.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். #KamalHaasan #TamilNewYear
Tags:    

Similar News