சினிமா

`நரகாசூரன்' படக்குழுவின் அடுத்த அப்டேட்

Published On 2017-10-21 10:42 GMT   |   Update On 2017-10-21 10:42 GMT
`துருவங்கள் பதினாறு' படத்தை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் `நரகாசூரன்' படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்கள் கசிந்து வருகிறது.
`துருவங்கள் பதினாறு' படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் அடுத்ததாக இயக்கி வரும் படம் `நரகாசூரன்'.

கடந்த மாதம் ஊட்டியில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பில் சந்தீப் கிஷன், ஆத்மிகா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இரண்டாவது கட்ட படப்பிடிப்பு நடத்தப்பட இருக்கிறது. அதில் அரவிந்த்சாமி, இந்திரஜித் சுகுமாரன், ஸ்ரேயா சரண் உள்ளிட்டோர் பங்கேற்க இருக்கின்றனர்.

கவுதம் மேனனின் ஒண்ராகா என்டர்டெயின்மெண்ட் மற்றும் கார்த்திக் நரேனின் நோஸ்டால்ஜியா பிலிமோடெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை வருகிற பிப்ரவரி மாதம் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

ரோன் ஈதன் யோகன் இசையமைக்கும் இப்படத்தில் பாடல்கள் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News