search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆத்மிகா"

    • மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆத்மிகா இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்
    • இப்படத்தை அறிமுக இயக்குநரான லதா மணியரசு இயக்குகிறார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களுள் யோகி பாபு ஒருவர். சமீபத்தில் வெளியான ஜவான் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படத்திலும் ரஜினிகாந்தை கலாய்த்தும், கிண்டல் செய்தும் மக்கள் மனதை கவர்ந்திருப்பார்.

    யோகி பாபுவிற்கு பலப்படங்கள் லைன் அப்பில் இருந்தாலும். அதில் ஒன்று அவர் நடித்து வெளிவரப் போகும் படம் "மிஸ் மேகி." இதில் அவர் வயதான பெண்மணி வேடத்தில் நடித்து இருக்கிறார். படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முடிவடைந்தது.

    மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆத்மிகா இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை அறிமுக இயக்குநரான லதா மணியரசு இயக்குகிறார். இவர் செல்வராகவன் உதவி இயக்குநராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இன்று பிறந்தநாள் கொண்டாடும் மாதம்பட்டி ரங்கராஜிற்கு வாழ்த்து சொல்லி படக்குழுவினர் போஸ்ட்ரை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • நடிகை ஆத்மிகா தமிழில் பல படங்களில் நடித்துள்ளார்.
    • இவர் அடிக்கடி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

    ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்திருந்த மீசைய முறுக்கு படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் ஆத்மிகா. அதன்பின்னர் கோடியில் ஒருவன், காட்டேரி, கண்ணை நம்பாதே, திருவின் குரல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஆத்மிகா அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

    இறை நம்பிக்கை அதிகம் கொண்ட நடிகை ஆத்மிகா நேரம் இருக்கும்போது கோவில்களுக்கும் சென்று வருகிறார். இந்நிலையில், இவர் சென்னை, வடபழனி முருகன் கோவிலில் ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கி உள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஆத்மிகாவின் இந்த செயலை பார்த்த ரசிகர்கள் அவரை வாழ்த்தி கமெண்ட் செய்து வருகின்றனர்.


    • மீசைய முறுக்கு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஆத்மிகா.
    • சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான திருவின் குரல் கலவையான விமர்சனங்களை பெற்றது.

    ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்திருந்த மீசைய முறுக்கு படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் ஆத்மிகா. அதன்பின்னர் கோடியில் ஒருவன், காட்டேரி, கண்ணை நம்பாதே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஆத்மிகா சமீபத்தில் வெளியான திருவின் குரல் திரைப்படத்தில் அருள்நிதியுடன் இணைந்து நடித்திருந்தார். தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் நரகாசூரன் படத்தில் நடித்து வருகிறார்.


    ஆத்மிகா

    ஆத்மிகா

    இந்நிலையில் ஆத்மிகா திருத்தணி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இது தொடர்பான புகைப்படங்கள் அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

    • மு.மாறன் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'கண்ணை நம்பாதே'.
    • இப்படம் கடந்த 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

    கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தின் இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'கண்ணை நம்பாதே'. சஸ்பென்ஸ் கலந்த கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி உள்ள இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார்.


    கண்ணை நம்பாதே

    மேலும் சதீஷ், பூமிகா, மஹிமா நம்பியார், வித்யா பிரதீப், அஜ்மல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வி.என்.ரஞ்சித் குமார் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். இப்படம் கடந்த 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


    தாத்தாவுடன் ஆத்மிகா

    இந்நிலையில், நடிகை ஆத்மிகா 'கண்ணை நம்பாதே' திரைப்படத்தை தனது தாத்தாவுடன் பார்த்துள்ளார். இதனை சமூக வலைதளத்தில்  புகைப்படத்தை பகிர்ந்து தெரிவித்துள்ளார். மேலும், அதில், "மகிழ்ச்சி என்பது உங்கள் தாத்தாவின் முகத்தில் பெருமிதம் பிரகாசிப்பதை பார்ப்பது. 90 வயதிற்கு மேற்பட்டவர் அவரது பேத்தி படத்தைப் பார்க்க சிரமமின்றி படிக்கட்டுகளில் ஏறினார். விலைமதிப்பற்ற இந்த தருணங்கள் என்றென்றும் பொக்கிஷமாக இருக்கும்" என்று பதிவிட்டுள்ளார். 


    • நடிகை ஆத்மிகா தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.
    • இவர் நடித்த ‘கண்ணை நம்பாதே’ திரைப்படம் நேற்று வெளியானது.

    கடந்த 2017-ஆம் ஆண்டு ஹிப் ஹாப் ஆதி இயக்கத்தில் வெளியான 'மீசைய முறுக்கு' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஆத்மிகா. இப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து இவர் கோடியில் ஒருவன், காட்டேரி போன்ற படங்களில் நடித்து கவனம் பெற்றார்.


    ஆத்மிகா

    சமீபத்தில் இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் 'கண்ணை நம்பாதே' திரைப்படத்தில் நடித்திருந்தார். ஸ்பென்ஸ் கலந்த கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி உள்ள இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ளார். மேலும் சதீஷ், பூமிகா, மஹிமா நம்பியார், வித்யா பிரதீப், அஜ்மல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    ஆத்மிகா

    இப்படம் நேற்று (மார்ச் 17) திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், நடிகை ஆத்மிகா, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.


    ×