சினிமா

நாசர், விஷால், கார்த்தி ஆகியோரிடம் விசாரணை நடத்த உத்தரவு

Published On 2017-09-23 12:09 GMT   |   Update On 2017-09-23 12:09 GMT
நடிகர் சங்க தலைவர் நாசர், செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி ஆகியோரிடம் விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2015ம் ஆண்டு நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றது. இதில் தலைவராக நாசரும், செயலாளராக விஷாலும், பொருளாளராக கார்த்தியும் வெற்றி பெற்றார்கள். இதன் பின் நடிகர் சங்க கட்டிடம் உருவாக்குவதற்காக நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இதில் பல முன்னணி நடிகர்கள் கலந்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியை தனியார் டிவி நிறுவனம் ஒளிபரப்பியது.

இதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், நடிகர் சங்க நிதியில் கையாடல் செய்திருப்பதாகவும், நடிகர் சங்க உறுப்பினர் வராகி வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்கு பதியலாம் என்று கூறியிருக்கிறார்கள். மேலும் நடிகர் சங்க தலைவர் நாசர், செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி ஆகியோரிடம் விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளது.
Tags:    

Similar News