சினிமா

விமான நிலையத்திற்கு டிராபிக் இல்லாமல் சென்ற ஆர்யா

Published On 2017-08-29 11:07 GMT   |   Update On 2017-08-29 11:07 GMT
சென்னை விமான நிலையத்திற்கு எந்த வித டிராபிக்கும் இல்லாமல் மெட்ரோ ரெயிலில் சென்றிருக்கிறார் நடிகர் ஆர்யா.
பொதுவாக நடிகர்கள், நடிகைகள் பொது இடங்களுக்கு செல்வதில்லை. தமிழ் நாட்டில் பொது இடங்களுக்கு செல்வதை விட வெளிநாடுகளில் அதிகமாக செல்லவே ஆசைப்படுகிறார்கள். இதில் விலகி ஒரு சிலர் மட்டும் மிகவும் எளிமையாகவும் சாதாரணமாகவும் பொது இடங்களில் சகஜமாக சென்று வருவார்கள்.

அப்படி பொது இடங்களுக்கு மிகவும் சாதாரணமாக சென்று வருபவர் நடிகர் ஆர்யா. இவர் அடிக்கடி காலையில் சைக்கிள் ஓட்டிகொண்டு பொது இடங்களில் பயணித்து வருகிறார். அதுபோல் இன்று சென்னை மெட்ரோ இரயில் பயணம் செய்திருக்கிறார்.


இன்று காலை சென்னை அண்ணா நகர் கிழக்கில் இருந்து விமான நிலையம் வரை பயணம் செய்திருக்கிறார். மேலும் விமானம் நிலையம் செல்ல டிராபிக் பற்றிய பிரச்சனை இல்லை. ஈஸியாக போக முடிகிறது என்றும் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார். தற்போது இந்தப் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

‘கடம்பன்’ படத்திற்கு ஆர்யா தற்போது அமீர் இயக்கத்தில் ‘சந்தனத்தேவன்’ படத்திலும், சுந்தர்.சி. இயக்கத்தில் ‘சங்கமித்ரா’ படத்திலும் நடித்து வருகிறார்.
Tags:    

Similar News