சினிமா

நடிப்பதை தவிர்க்கும் ஓவியா

Published On 2017-08-17 09:27 GMT   |   Update On 2017-08-17 09:27 GMT
தனியார் தொலைக்காட்சி நடத்திய ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ஓவியாவுக்கு படவாய்ப்புகள் வந்தும் நடிப்பதை தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது.
தனியார் தொலைக்காட்சியில் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் நடிகர் கமல்ஹாசன் இதனை தொகுத்து வழங்குகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்களின் பேச்சும், நடவடிக்கைகளும் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. இதில் எப்போதும் கலகலப்புடனும், சுறுசுறுப்படனும் இருந்த நடிகை ஓவியா திடீரென்று மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் மாறினார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக பங்கேற்பாளரான ‘ஆரவ்’ உடன் காதல் வயப்பட்டு அது தோல்வி அடைந்ததால் இந்த நிலைக்கு மாறியதாக ஓவியா தெரிவித்தார்.



தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் இருக்க முடியாத அளவுக்கு மனநிலை பாதிக்கப்பட்டதால் நடிகை ஓவியா நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி சொந்த ஊரான கேரள மாநிலம் கொச்சிக்கு சென்றுவிட்டார். அங்கு அவர் மனநல சிகிச்சை பெறுவது போன்ற புகைப்படங்களும் தொடர்ந்து ரசிகர்களுடன் இருக்கும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகின.

இந்நிலையில், ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி இருக்கும் ஓவியாவுக்கு பட வாய்ப்புகள் அதிகமாகி இருக்கிறது. ஆனால் ஆரவ்வை காதலித்த அவர் இன்னும் அந்த நினைவில் இருந்து விடுபடவில்லை. ஆகவே புதிய பட வாய்ப்புகளை தவிர்ப்பதற்காகவே தனது முடி அலங்காரத்தை அசிங்கமாக்கிக்கொண்டார் என்று கூறப்படுகிறது.
Tags:    

Similar News