சினிமா

பாடலாசிரியராக அவதாரம் எடுத்த நடிகை விஜயலட்சுமி

Published On 2017-06-25 06:14 GMT   |   Update On 2017-06-25 06:14 GMT
‘சென்னை 600028’, ‘அஞ்சாதே’ உள்ளிட்ட படங்களில் நடித்த விஜயலட்சுமி தற்போது பாடலாசிரியராக அவதாரம் எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
பிரபல இயக்குனர் அகத்தியனின் மகளான விஜயலட்சுமி ‘சென்னை 600028’ மற்றும் ‘அஞ்சாதே’ படங்களில் நடிகையாக முத்திரை பதித்தவர். தற்பொழுது அவர் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தது மட்டும் இன்றி பாடலாசிரியராகவும் ஆகி உள்ளார்.

கிருஷ்ணா மற்றும் ஆனந்தி நடிக்கும் 'பண்டிகை' படத்தின் தயாரிப்பாளரான இவர் இப்படத்தின் பாடல் ஒன்று எழுதியுள்ளார். இப்படத்தை பெரோஸ் இயக்கியுள்ளார். விஜயலட்சுமியின் 'டீ டைம் டாக்' தயாரித்து 'ஆரா சினிமாஸ் ' விநியோகம் செய்யவுள்ளது. பண்டிகைக்காக ஆர்.எச்.விக்ரம் இசையமைத்துள்ளார்.



விஜயலட்சுமியை பாடல் எழுத வைத்தது குறித்து இயக்குனர் கூறும்போது, கவிதைகள் எழுதும் வழக்கம் கொண்டவர் விஜயலட்சுமி. அவரது பல கவிதைகள் எங்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 'பண்டிகை' படத்தின் ஒரு பாடலுக்காக  நாங்கள் சில பாடலாசிரியர்களை அணுகினோம். அவர்கள் தந்த வரிகளில் எனக்கு திருப்தி அளிக்காத நிலையில், விஜயலட்சுமி தான் எழுதலாமா என கேட்டார். நானும் தடுக்கவில்லை.

ஒரு சில நாட்கள் கழித்து அவர் எழுதியிருந்த வரிகளை படித்து மலைத்து போனேன். இசைக்கும் கதை நிலவரத்திற்கும் மிக சரியாக பொருந்தும் வரிகள்! 'அடியே' என தொடங்கும் இப்பாடல் வரிகளை நானும் இசையமைப்பாளர் ஆர்.எச்.விக்ரமும் மிகவும் ரசித்தோம்.



இப்பாடலின் மூலம் இப்படம் மேலும் புத்துணர்ச்சி பெற்றுள்ளது. பெருகி வரும் இப்படத்தின் எதிர்பார்ப்பு எனக்கு மேலும் பொறுப்புணர்வு தந்துள்ளது. ஜூலை 7 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள 'பண்டிகை' க்கு நல்ல சினிமாவை எப்பொழுதும் கொண்டாடும் தமிழ் சினிமா ரசிகர்கள் வரவேற்பளிப்பார்கள் என நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News