சினிமா
ரஜினி தனிக்கட்சி தொடங்குவார்: நண்பர் ராஜ்பகதூர் உறுதி
ரஜினி நிச்சயமாக அரசியலுக்கு வருவார், தனிக்கட்சி தொடங்குவார் என்று நண்பர் ராஜ்பகதூர் மீண்டும் உறுதி அளித்திருக்கிறார்.
நடிகர் ரஜினியின் ஆத்மார்த்த நண்பராக இருப்பவர் ராஜ்பகதூர்.
பெங்களூரில் இவரும், ரஜினியும் டிரைவர் - கண்டக்டராக பணிபுரிந்தவர்கள். ரஜினியின் திரையுலக பிரவேசத்துக்கு ராஜ்பகதூர் உதவியாக இருந்தார்.
ரஜினி என்ன நினைக்கிறார்? அடுத்து என்ன செய்யப் போகிறார்? என்பதை துல்லியமாக அறிந்த, விரல் விட்டு எண்ணக் கூடியவர்களில் நண்பர் ராஜ்பகதூரும் ஒருவராவார். ரஜினி அரசியலுக்கு வருவார் என்று அவர் சமீபத்தில் பேட்டியளித்தார்.
அதை உறுதிபடுத்தும் வகையில் ராஜ்பகதூர் மீண்டும் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அந்த பேட்டியின் போது ராஜ்பகதூர் கூறியதாவது:-
நடிகர் ரஜினி 10 நாட்களுக்கு முன்பு பெங்களூரில் நடந்த ஒரு திருமணத்துக்கு வந்திருந்தார். அப்போது ரஜினியுடன் நண்பர்கள் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து பேசினோம். சுமார் 4 மணி நேரம் நாங்கள் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினோம்.
அப்போது நான் ரஜினியிடம், “உங்கள் மனம் மாறி விட்டதா?” என்று கேட்டேன். அதற்கு ரஜினி, “ஆமாம். இப்போது நான் தயாராகி விட்டேன். தமிழக அரசியலை நான் மிக உன்னிப்பாக கடந்த 20 ஆண்டுகளாக கவனித்து வருகிறேன்” என்றார்.
ரஜினி மனதளவில் தயாராகிவிட்டார். அவர் அரசியலுக்கு வருவது உறுதி. நிச்சயம் அரசியலில் ஈடுபடுவார்.
அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரஜினி விரைவில் வெளியிடுவார். நிச்சயம் அந்த அறிவிப்பு வெளியாகும். உறுதியாக சொல்கிறேன். ரஜினி அறிவிப்பை விரைவில் நீங்கள் எதிர்பார்க்கலாம்.
இவ்வாறு ரஜினியின் நண்பர் ராஜ்பகதூர் கூறினார்.
பெங்களூரில் இவரும், ரஜினியும் டிரைவர் - கண்டக்டராக பணிபுரிந்தவர்கள். ரஜினியின் திரையுலக பிரவேசத்துக்கு ராஜ்பகதூர் உதவியாக இருந்தார்.
ரஜினி என்ன நினைக்கிறார்? அடுத்து என்ன செய்யப் போகிறார்? என்பதை துல்லியமாக அறிந்த, விரல் விட்டு எண்ணக் கூடியவர்களில் நண்பர் ராஜ்பகதூரும் ஒருவராவார். ரஜினி அரசியலுக்கு வருவார் என்று அவர் சமீபத்தில் பேட்டியளித்தார்.
அதை உறுதிபடுத்தும் வகையில் ராஜ்பகதூர் மீண்டும் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அந்த பேட்டியின் போது ராஜ்பகதூர் கூறியதாவது:-
நடிகர் ரஜினி 10 நாட்களுக்கு முன்பு பெங்களூரில் நடந்த ஒரு திருமணத்துக்கு வந்திருந்தார். அப்போது ரஜினியுடன் நண்பர்கள் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து பேசினோம். சுமார் 4 மணி நேரம் நாங்கள் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினோம்.
அப்போது நான் ரஜினியிடம், “உங்கள் மனம் மாறி விட்டதா?” என்று கேட்டேன். அதற்கு ரஜினி, “ஆமாம். இப்போது நான் தயாராகி விட்டேன். தமிழக அரசியலை நான் மிக உன்னிப்பாக கடந்த 20 ஆண்டுகளாக கவனித்து வருகிறேன்” என்றார்.
ரஜினி மனதளவில் தயாராகிவிட்டார். அவர் அரசியலுக்கு வருவது உறுதி. நிச்சயம் அரசியலில் ஈடுபடுவார்.
அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரஜினி விரைவில் வெளியிடுவார். நிச்சயம் அந்த அறிவிப்பு வெளியாகும். உறுதியாக சொல்கிறேன். ரஜினி அறிவிப்பை விரைவில் நீங்கள் எதிர்பார்க்கலாம்.
இவ்வாறு ரஜினியின் நண்பர் ராஜ்பகதூர் கூறினார்.