சினிமா

விஷ்ணுவுக்காக ஆதியும், அந்தமுமாகிய சிம்பு

Published On 2017-05-21 05:16 GMT   |   Update On 2017-05-21 05:16 GMT
தமிழ் சினிமாவில் பலதிறமைகளை கொண்ட நடிகர்களுள் ஒருவராகிய சிலம்பரசன், தனது நண்பன் விஷ்ணு விஷாலுக்காக ஆதியும், அந்தமுமாகியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் பலதிறமைகளை கொண்ட நடிகர்களுள் ஒருவர் சிலம்பரசன். நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சிம்பு, தனது நண்பர்களுக்காக அவர்களது படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பது, பாடல்கள் பாடுவது என பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள `அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படம் ரம்ஜானை முன்னிட்டு வருகிற ஜுன் 23-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதுதவிர ஜெயம்ரவியின் `வனமகன்' படமும், முருகானந்தம் இயக்கத்தில் விஷ்ணு விஷால் - கேத்தரின் தெரசா இணைந்து நடித்திருக்கும் `கதாநாயகன்' படமும் சிம்பு படம் ரிலீசாகும் அதேநாளில் ரிலீசாக உள்ளது.



இருந்த போதிலும் `கதாநாயகன்' படத்தில் தொடக்கமும் நானே, முடிவும் நானே என்ற வகையில் சிம்பு தனது குரலை கொடுத்திருக்கிறார். அதாவது, `கதாநாயகன்' படத்தின் தொடக்கத்திலும், முடிவிலும் தனது நெருங்கிய நண்பன் சிம்பு அவரது குரலில் பேசியிருப்பதாக படத்தின் நாயகன் விஷ்ணு விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

விஷ்ணு விஷால் தற்போது `பொன் ஒன்று கண்டேன்', `சிலுக்குவார்பட்டி சிங்கம்', `மின்மினி' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
Tags:    

Similar News