சினிமா

நயன்தாராவின் ‘டோரா’ படத்தில் போராடி வாய்ப்பு பெற்றேன்: வெற்றி

Published On 2017-04-29 11:22 GMT   |   Update On 2017-04-29 11:22 GMT
நயன்தாராவின் ‘டோரா’ படத்தில் போராடி வாய்ப்பு பெற்றதாக அப்படத்தின் வில்லன்களில் ஒருவரான வெற்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவர் அளித்த முழு தகவலை கீழே பார்ப்போம்.
நயன்தாரா நடிப்பில் வெளியான ‘டோரா’ படத்தில் அமானுஷ்ய சக்தி மூலம் பழிவாங்கப் படும் 3 வில்லன்களில் ஒருவராக நடித்திருப்பவர் நடிகர் வெற்றி.

அந்த கதாபாத்திர வாய்ப்புக்காக பட்ட பாடு பற்றி கூறிய வெற்றி...

“எனக்குச் சினிமா மீது ஆசை.ஆர்வம், மோகம் உண்டு. எனக்குச் சிறிதளவு வருமானமும் வர வேண்டும்.எனவே நிறைய விளம்பரங்கள், சிறிய படங்கள், டிவி தொடர்களில் டப்பிங் பேசினேன். மேடை நாடக அனுபவங்களும் உண்டு. ஏழு குறும்படங்களில் நடித்திருக்கிறேன்.



‘டோரா’ படத்தில் பானிபூரி விற்பவன் பாத்திரத்துக்கு ஆள் தேடுவதாக அறிந்து இயக்குனர் தாஸ் ராமசாமியிடம் போய் வாய்ப்பு கேட்டேன். எப்படியாவது இந்த வாய்ப்பைப் பெறுவது என்று தீர்மானித்து அசல் பானிபூரிக்காரன் போல என்னை மாற்றிக் கொண்டேன். மறு நாள் இயக்குநரைச் சந்தித்த போது ஒருவழியாக சமாதானம் ஆகி.. நீயே நடி என்றார். இப்படி வந்ததுதான். ‘டோரா’ பட வாய்ப்பு. இதில் நான் புதிய நடிகன். ஆனால் பெரிய ஸ்டாரான நயன்தாரா மேடம் எங்களுடன் எளிமையாகப் பழகினார்” என்றார்.

Tags:    

Similar News