8.4.2024 முதல் 14.4.2024 வரை
பணமழை பொழியும் வாரம். களத்திர ஸ்தான அதிபதி சுக்ரன் உச்சம் பெற்று பூர்வ புண்ணிய ஸ்தா னத்தில் ராகுவுடன் சேர்க்கை
பெறுவதால் பிறர் எளிதில் செய்யத் தயங்கும் காரியங்களை வெற்றி கரமாக செய்வீர்கள்.அன்றாட தேவைக்கு திணறியவர்களுக்கு சரளமான பணப்புழக்கம் உண்டாகும். முக்கிய பணிகளில் முழு முயற்சியுடன் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். நிறை வேறாத அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் கூடி வரும். சிலருக்கு பினாமிச் சொத்து கிடைக்கும். சிலருக்கு உழைப்பில்லாத வருமானம் அதிர்ஷ்ட பொருள் பணம் தேடி வரும். இது வரை கல்யாணம் நடக்குமா என்று ஏங்கியவர்களுக்கு நல்ல வரன் அமையும். அல்லது விருப்ப விவாகம் நடைபெறும். பூர்வீகம் சம்பந்தப்பட்ட விசயங்களில் சாதகமான மாற்றம் உண்டாகும்.
சிலர் காரிய வெற்றிக்காக கோவில் குளம் என்று செல்லலாம். சிலரின் தந்தை வெளிநாடு செல்லலாம். சில மாணவர்கள் பள்ளி மாற்றம் பற்றி சிந்திக்கலாம். சிலர் பிழைப்பிற்காக பூர்வீகத்தை விட்டு வெளியேறலாம். 13.4.2024 மதியம் 12.44-க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் ஞாபக சக்தி குறையும். வம்பு, வழக்கு களை ஒத்தி வைக்கவும். விநாயகரை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406