null
29.04.2024 முதல் 05.05.2024 வரை
சோதனைகள் சாதனைகளாக மாறும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் ராசிக்கு 5-ல் ராகு மற்றும் அஷ்டமாதிபதி புதனுடன் சேருவதால் பேச்சை மூலதனமாக கொண்ட வக்கீல்கள், ஆசிரியர்கள், விற்பனை பிரதிநிதிகள் ஏற்றம் பெறுவார்கள். பங்கு வர்த்தகத்தில் ஏற்ற இறக்கமான நிலை நீடிக்கும். எதிர் பாலினத்தவரால் நிம்மதி குறையும். தேவையற்ற நட்புகள், உறவுகளின் தொல்லைகள், நெருக்கடிகள் உண்டாகும்.
சொத்துக்களாலும் சொந்தங்களாலும் சில பிரச்சினைகள் தலை தூக்கும். உறவினர்களுக்கு செய்யும் உதவி உபத்திரமாக முடியும். சிலருக்கு வேற்று மொழி கற்கும் ஆர்வம் அதிகரிக்கும். வெளிநாட்டு தொழில் மூலம் அபாரமான பண வரவு கிடைக்கும். பொருளாதார சிக்கலில் இருந்து விடுபடுவீர்கள். திருமணத்திற்கு வெளியூர் வரன் அமையும் வாய்ப்புகளே அதிகம் உள்ளது. உயர் கல்வி வாய்ப்பு நிறைவேறும். வேலைக்காக தனித்தனி ஊரில் வசித்த தம்பதிகள் சேர்ந்து வாழ்வார்கள். கோபத்தால், தெளிவற்ற சிந்தனையால் நல்ல வாய்ப்புகளை தவற விடலாம். ராசியை குரு பார்ப்பதால் அனைத்து பிரச்சினைகளும் குரியனைக் கண்ட பனிபோல் விலகும். செவ்வாய்க்கிழமை ஸ்ரீ வீரலட்சுமியை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406