22.4.2024 முதல் 28.4.2024 வரை
எதிர்பார்த்த இலக்கை அடையும் வாரம். ராசிக்கு ராசி அதிபதி குருவின் பார்வை இன்னும் ஒரு வாரத்திற்கு மட்டுமே உள்ளது. அதேபோல் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன் குரு சேர்க்கை 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே ஏற்படும்.மே1, 2024 வரை நீடிக்கும் இந்த யோகத்தால் அரசாங்கம் மூலமாக திடீர் அதிர்ஷ்டம் ஏற்படலாம். ஆன்மீகம் ,ஜோதிடம் ஆகியவற்றில் சிறப்பான தேர்ச்சி, நல்ல வீடு,வாகனம் வாங்குதல் போன்ற நன்மைகள் கிடைக்கும். சுய ஜாதகத்தில் அதற்கேற்ற தசா புக்திகள் நடக்கும் காலங்களில், எதிர்பாராத விதத்தில் அதிர்ஷ்டம் ஏற்பட்டு, வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் காணலாம்.
உங்களை எதிர்த்து செயல்பட்டவர்கள் காணாமல் போவார்கள்.தொழிலில் நிலவிய சங்கடங்கள் அகலும். குடும்பசுமை குறையும். எதிர்பார்த்த தன வரவுகள் இருக்கும். செலவைவிட வருமானம் அதிகரிக்கும்.மனம் விரும்பும் திருமண வாழ்க்கை அமையும். மறுமண முயற்சி சித்திக்கும். நண்பர்கள் மற்றும் தொழில் கூட்டாளிகளுக்கு ஜாமீன் போடக்கூடாது. உடல் நிலை தேறும். புதியசொத்து வாங்குபவர்கள் பட்டாவை சரிபார்க்க வேண்டும். சித்ரா பவுர்ணமியன்று சித்தர்களை ஜீவ சமாதியில் வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406