4.3.2024 முதல் 10.3.2024 வரை
மகிழ்ச்சியான வாரம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி செவ்வாய் ராசி அதிபதி குருவைப் பார்ப்பதால் வெற்றிமேல் வெற்றி வந்து உங்களைச் சாரும். பணம் பல வழிகளில் வந்து பையை நிரப்பும். பண வரவு தாராளமாக இருப்பதால் தாராளமாக செலவு செய்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள். ஆடம்பர பொருட்களின் சேர்க்கையும், சேமிப்பும் அதிகரிக்கும். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு கட்டுப்படுவார்கள் பூர்வீகத்திற்கு சென்று குல தெய்வ வழிபாடு செய்து வருவீர்கள். திருமண வயதில் இருப்பவர்களுக்கு மனதில் நினைத்தது போன்ற சிறப்பான நல்ல வரன்கள் தேடி வரும்.
ராசி அதிபதி குருவின் பார்வை சுமார் 2 மாதங்களுக்கு மட்டுமே ராசிக்கு கிடைக்கப்போகிறது. அதன் பிறகு , தனம், குடும்ப ஸ்தானத்தில் குரு பார்வை பதியப் போகிறது. அதற்குரிய அறிகுறிகள் இப்பொழுதே உங்களுக்கு தெரியத் துவங்கிவிடும். தொழிலில் ஏற்பட்ட மறை முகத் தொல்லைகளும், விமர்சனங்களும் விலகும். குடும்பத்தி னரின் தேவைகளை நிறை வேற்றுவீர்கள். கணவன், மனைவிக்கி டையே ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சகோதரர்களுடன் இணைந்து முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த காலம். சிவராத்திரியன்று சந்தன அபிசேகம் செய்து சிவனை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406