12.2.2024 முதல் 18.2.2024 வரை
துன்பமும், துயரமும் தீரும் வாரம். ராசி அதிபதி சூரியன் தன் வீட்டைத் தானே பார்க்கிறார் .4,9-ம் அதிபதி செவ்வாய் உச்சம். இது சிம்ம ராசிக்கு மனம் விரும்பும் மகிழ்ச்சியான வாழ்க்கை யை வழங்கப் போகிறது. காலத்திற்கும் அழியாப் புகழ் உண்டாகும். தன்நம்பிக்கை அதிகரிக்கும். புதிய வழியில் சம்பாதிக்கும் ஆர்வம் அதிகரிக்கும். வெளி வட்டார தொடர்புகளால் புதிய தொழில் வாய்ப்பு கிடைக்கும். சிலர் தொழிலுக்காக பூர்வீகத்தை விட்டு இடம் பெயரலாம். குழந்தை பாக்கியத்தில் நிலவிய தடை, தாமதம் நீங்கும். சிலர் வீட்டிற்கு வர்ணம் பூசி புதுப்பிப்பார்கள்.
கருத்து வேறுபாட்டால் பேசாமல் இருந்த சம்பந்திகள் பிள்ளைகள் நலன் கருதி அனுசரித்து செல்வார்கள். மண், மனை, பூமி, வீடு, வண்டி, வாகனம் வாங்கும், விற்கும். புதிய முயற்சியில் வெற்றி உண்டாகும். சுப விரயங்கள் அதிகமாகும்.திருமணம் பற்றிய நல்ல தகவல்கள் வந்து சேரும். பணம், கொடுக்கல் வாங்கல் சிக்கல்கள் குறையும்.14.2 2024 அன்று காலை 10.43 மணி வரை சந்தி ராஷ்டமம் இருப்பதால் வீட்டுப் பெரியவர்களின் ஆலோசனையை மதித்து நடப்பது அவசியம். ஆரோக்கி யத்தில் கவனம் தேவை. தினமும் சிவபுராணம் படிக்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406