25.3.2024 முதல் 31.3.2024 வரை
புண்ணிய பலன்கள் நடக்கும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சுக்ரன் தொழில் ஸ்தானத்தில் உச்சம் பெறுவதால் மிதுனத்திற்கு தடைக் கற்களை படிக்கற்களாக மாற்றும். முன்னோர்கள் நல்லாசியாலும் குல தெய்வ அருளாலும் தான தர்மங்கள், முன்னோர் வழிபாடு செய்து பாக்கிய பலனை அதிகரிப்பீர்கள். தடைபட்ட நிறைவேற்றாத குல தெய்வ பிரார்த்தனைகளை நிறை வேற்ற ஏற்ற காலம். பாக்கியபலத்தால் உங்களுக்கு வந்த பிரச்சி னைகள் வீட்டை விட்டு வெளியேறும். வரப்போகும் பிரச்சினைகள் வீதியோடு நின்று விடும். குழந்தை இல்லாதவர்களுக்கு குலதெய்வமே குழந்தையாக வந்து பிறக்கும். பங்குச் சந்தை ஆதாயத்தால் வருமானம் இரட்டிப்பாகும்.
நீண்ட காலமாக அனுப வித்து வந்த டென்சன், மன உளைச்சலில் இருந்து விடுபடுவீர்கள். சந்தேகம், ஊக்கமின்மை, நம்பிக்கைக் குறைவு விலகும். சுய கவுரவம், மரியாதை காப்பாற்றப்படும். தொழில், உத்தியோகத்தில் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் கிடைக்கும்.7ம் இடத்திற்கு குருப் பார்வை இருப்பதால் பெற்றோர்கள், பெரியோர்களின் நல்லா சியுடன் திருமணம் நடக்கும். வரன் பற்றிய பெரிய எதிர்பார்ப்பை குறைத்தால் உடனே திருமணம் நடக்கும். மேலும் பல பாக்கி யங்களை அதிகரிக்க மகாலட்சுமியை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406